skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, April 13, 2010

முகம் தெரியா வில்லன்கள்

வாழ்க்கையில் எத்தனையோ வில்லத்தனம் மத்தவங்க பண்ணி பார்த்திருப்போம் ஏன் சில நேரங்களில் நாம் கூட சில சில்லறை வில்லத்தனம் செய்திருப்போம் . ஆனால் இன்று வரை ஆணா பெண்ணா என்று கூட என்னால் கண்டுபிடிக்கமுடியா வில்லன்கள் மூன்று பேர் . 







1 . பள்ளியில் என் புத்தம்புதிய சைக்கிள் என் அண்ணா ஆசையா என் பெயர் எழுதி குடுத்தான் . பள்ளி முடிந்து சைக்கிள் எடுக்கும்பொழுது பஞ்சர் ஆயிருக்கும் . சரின்னு நானும் ஒரு 1 .5 KM உருட்டிகிட்டே வருவேன் , கடுப்பா வரும் . பஞ்சர் கடையிலதான் தெரியும் ஒரு பத்து பஞ்சர் இருக்கும் . அப்போதான் சொன்னாரு இது முள்ளு குத்தி வந்தது இல்லமா யாரோ வேணும்னே ஊசி வச்சு வீல சுத்தவிட்டு பஞ்சர் பண்ணி இருக்காங்க என்று . வேற என்ன செய்ய பஞ்சர் போட்டு வீடு வருவேன் . இது பல முறை நடந்தது .நான் வர நேரம் லேட் ஆகியும் இன்னும் வந்து சேரலன்னு அப்பா இல்ல அண்ணா என்னை தேடியே வந்துடுவாங்க .  யார்டா இது தொடர்ந்து நம்ம சைக்கிள பஞ்சர் பண்றாங்கன்னு எனக்கும் ஒன்னும் புரியல. பையன் வர வாய்ப்புக்கள் குறைவு . தனித்தனி கிரௌண்ட்லதான் சைக்கிள விடுவோம் . பொண்ணுங்க சைடு கிரௌண்ட்க்கு பசங்க வரவும் கூடாது . கடைசி வரைக்கும் கண்டு பிடிக்க முடியல . நானும் எத்தன முறை டயர் மாத்துறது ? என் அண்ணா வெறுத்து போய் என் பெயரை அழிச்சுட்டான் , நிஜமா அதுக்கு பிறகு அந்தமாதிரி நடக்கவே இல்ல .



2 . காலேஜ்ல ஒரு நிகழ்ச்சிக்காக நம்ம பாப்பையா வந்தார் . காலேஜ் பழக்கம் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மாணவர்களின் பங்களிப்பாக கவிதை , ஓவியம் etc பெரிய சார்ட் பேப்பரில் செய்து குடுக்க சொல்லுவாங்க . ஒருமுறை " தீபம் " என்ற பெயரில் விழா நடந்தது . நானும் ஒரு சார்ட் பேப்பர் முழுவதும் வரும்படி கொஞ்சம் பெரிய கவிதை எழுதி குடுத்தேன் , ஸ்டேடியம் இல்லாத காரணத்தினால் நிகழ்ச்சிகள் எல்லாம் எக்ஸாம் ஹால்லதான் நடக்கும் . அதற்க்கு போகும் வழியெங்கும் நுழைவாயிலிருந்து இருபுறமும் சுவர்களில் எங்கள் சார்ட் பேப்பர் ஓட்டபற்றிருக்கும் . நானும் என் சார்ட் தேடுறேன் கண்ணிலேயே படல . என் வகுப்பு மாணவன் வந்து மதார் கவிதை நல்லா இருக்குனு சொல்றான் . என்னப்பா சொல்ற என் சார்ட் காணோமே என்று நான் கேட்க அவனும் அது ஒட்டபட்டிருந்த இடத்துக்கு கூட்டிட்டு போனான் . நுழைவாயில் வெளிப்புறம் உள்ள கண்ணாடியில் அது ஒட்டப்பட்டு கிழிக்கப்பட்ட சுவடுகள் மட்டுமே மிஞ்சி இருந்தது . அந்த இடம் எல்லாருடைய பார்வைக்கும் படும் இடம் என்பதால் ஏதோ ஒரு நல்ல உள்ளம் மனசு பொருக்காம அதை கிழிச்சுருக்கு.இன்னமும் அது யாரென்று தெரியல . கண்டிப்பா பொண்ணுங்க அதை பண்ணிருக்க  மாட்டாங்க , ஏதோ ஒரு பையன்தான் . பசங்கதான் என்ன நடந்தாலும் காட்டி கொடுக்க மாட்டாங்களே !!!!!!!!!!



3 .என்வாழ்விலே மறக்க முடியா ஆள் . என் நிம்மதியை 3 மாதம் கெடுத்த ஆள் . எங்கிருந்தோ என் மொபைல் நம்பர் தெரிஞ்சு எனக்கு கால் வந்தது . நானும் கால் அட்டென்ட் பண்ணுவேன் எதிர்முனையில் அமைதி மட்டுமே இருக்கும் .ஆள் போற இடம் எல்லாம் காயின் போன் ஒரு ரூபா போட்டு எனக்கு கால் பண்ணிடும் . கால் கட் ஆன அடுத்த நொடியே நான் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசினா போன் உரிமையாளர் கால் பண்ணது யாருன்னு தெரியலன்னு சொல்லிடுவாங்க . ஏர்டெல் ,ஏர்செல் ,வோடபோன்,பிஸ்என்எல் இருக்குற எல்லா சிம்ளையும் ஒரு நம்பர் . அவங்கள தொடர்பு கொண்டு பேசினாலும் நம்பர் உரிமையாளர் பத்தின விபரங்கள் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க . என் நண்பர்கள் எல்லாம் என் நம்பர் மாத்த சொன்னாங்க . எவனோ ஒருத்தனுக்காக நான் நம்பர் மாத்தவும் விரும்பல . மொபைல் வாங்கின நாள்முதலாய் என்னிடம் இருக்கும் நம்பர் அது .நானும் திட்டி பார்த்துட்டேன் .என் அண்ணா என் நண்பர்கள் எல்லாம் திட்டிட்டாங்க ஆள் அசரவே இல்ல . ஏதாவது பேசினாதானே, கால் வரும் மத்தபடி ரோட்ல போற வண்டி சத்தம் காக்கா கத்துறது இப்படித்தான் கேக்கும் . நானும் அப்புறம் கால் அட்டென்ட் பண்ணி அப்படியே வச்சிருவேன் அவன் பாலன்ஸ் போகட்டும் . என் மொபைல் வேற சோனி குறிப்பிட்ட நம்பர் மட்டும் குடுக்குற வசதிகளும்  இல்ல , என் மொபைல் காண்டாக்ட்ஸ் லிஸ்ட்ல S1 ஆரம்பிச்சு ஒரு S 12 வரை போச்சு . ஒருமுறை வந்த பப்ளிக் நம்பர் மீண்டும் வராது. ஆரம்பம்னு ஒன்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு நிச்சயம் உண்டு . நானும் எவ்வளவோ திட்டி பார்த்தும் முடியாத அந்த நம்பர் டார்ச்சர் ஒருநாள் நின்னு போச்சு . ஒருநாள் நான் கால் அட்டென்ட் பண்ணி ரொம்ப அமைதியா பொறுமையா பேசினேன் .ஒரு 5 வரிதான் பேசினேன் . ரொம்ப மான ரோசம் உள்ளவன் போல அதன் பிறகு கால் வரல . S1 -S12  எல்லாம் அப்புறம் அழிச்சேன், நான் கடைசியா பேசினது கண்டிப்பா சொல்லனுமா ?                             .................சென்சார் கட் .
.இதை படிக்குரவங்களுக்கு ஒரு வேண்டுகோள் பொண்ணுங்க நம்பர்க்கு ரீசார்ஜ் பண்ணும்போது தெரிந்த நபர்களிடமோ அல்லது நம் வீட்டின் அருகில் இருக்கும் தெரிந்த கடைகளிடமே பண்ணுவது நல்லது . கண்ட இடங்களில்  ரீசார்ஜ் பண்ணுவதால் இதுபோல் ஆபத்துகள் வரலாம்


என் ப்ளாக் 2 முறை தொலைந்து போனதால் மறுபடியும் அனைத்தும் பப்ளிஷ் பண்றேன் . இதை ஏற்கனவே படித்தோர் பொறுமை காக்கவும் . ட்ராப்ட் ல் வைக்க முடியாமல் ஒரு முழு back up எடுக்கவே இந்த முயற்சி .
Posted by மதார் at 10:25 AM
Labels: வில்லன்கள்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ▼  April (16)
      • சாவுகளும் சடங்குகளும்
      • அந்திவானம்
      • மாநகராட்சி பேருந்தும் , T .C யும் .
      • அழகு
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் 2
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1
      • கிராமம் நகரம் நான்
      • உள்ளூர் சினிமா VS உலக சினிமா -2
      • உலக சினிமா vs உள்ளூர் சினிமா - 1
      • முகம் தெரியா வில்லன்கள்
      • அம்மாவின் கொழுக்கட்டையும் திருகார்த்திகையும்
      • கூகிளாண்டவரின் தாண்டவ ஆட்டம் (Me Pavam)
      • அங்காடித் தெரு - தெரு கோணல்
      • பிள்ளையாரப்பா நீயே நியாயம் சொல்லு
      • அடுத்த வீட்ல ஆள் இருக்கா?
      • நண்பா இது உனக்காக
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio