skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, April 13, 2010

சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1


                    முதல் முறையாக A.C.BUS இல் 2008 தீபாவளிக்கு நெல்லை செல்ல 3.40 pm டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன் , அன்று மழை. மனித சங்கிலி போராட்டம் என்று ஏக கலவரம் சென்னையில் . இந்த நேசமணி , திருவள்ளூர் பெயர் குழப்பத்தால் 3 மணிக்கு கோயம்பேடு போயும் பேருந்தை தவறவிட்டேன் . நான் காத்திருந்தது திருவள்ளூர் பேருந்து நிற்க்குமிடம் , டிக்கெட் பதிவு செய்திருந்தது நேசமனியில் .நான் டிக்கெட் காண்பித்து கேட்டபோதும் அலுவலர்களும் சரியாய் பேருந்து எங்கே நிற்கும் என்று சொல்லவில்லை . எல்லாம் ஒரே நடைமேடைதான் நடைமேடை துவக்கத்தில் திருவள்ளூர் , கடைசியில் நேசமணி(எல்லாம் ஒரு அனுபவத்திற்கு பின்பு அறிந்து கொண்டது ) , ஒரே இடத்திற்கு செல்ல என்ன ஒரு திட்டமிடல் நம் அரசாங்கத்தில் .............!! மழை காரணமாய் பேருந்துகள் அனைத்தும் தாமதமாய் வரும் என்று அறிவிப்பு வேறு .

                    என் அருகில் இருந்த பெண்ணும் தனக்கான பேருந்து இன்னும் வரவில்லை , ஒரு மணிநேரமாய் காத்திருக்கிறேன் என்று சொன்னதால் நானும் நமக்கும் தாமதம் ஆகலாம் என்று காத்திருந்தேன் என் தோழியுடன் , அவள் நாகர்கோவில் போக மார்த்தாண்டம் பேருந்தில் முன்பதிவு செஞ்சிருந்தாள்.

                    மணி 3.50pm எனக்கோ இருப்பு கொள்ளவில்லை , மறுபடியும் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் இந்த பேருந்து கடைசியில் நிற்கிறது என்கிறார் கூலாக , நானும் தோழியும் மின்னல் வேகத்தில் சென்றால் என் பேருந்து சென்று ஐந்து நிமிடம் ஆகிறது என்று சொல்கிறார் அங்கு பணியில் இருப்பவர் . டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது மொபைல் நம்பர் கேட்கிறார்கள் எதற்கென்று தெரியவில்லை . மார்த்தாண்டம் பேருந்தும் புறப்பட தயாராய் இருந்ததால் தோழி ஏறிட்டா .நான் டிக்கெட் கையிலே வைத்துக்கொண்டு பாவமாய் நிற்கிறேன் . அப்பொழுது பார்த்து இங்கிருக்கும் உடன்பிறப்பு கால் பண்ண இருந்த கோவத்தில் அவனை திட்டிதீர்த்தேன் . கூட வந்து பஸ் ஏத்தி விடுறியா ? ஒரு டிக்கெட் வாங்கி தரியானு இது வரை அவன் மேலிருந்த கோவத்தை எல்லாம் காமிச்சேன்   . (நம்ம தப்பதான் நாம ஒத்துக்கமாட்டோம்ல ) அவன் கடுப்பாகி வச்சுட்டான் . அங்கிருந்த கண்காணிப்பாளர் நான் தவற விட்ட பேருந்தின் ஓட்டுனரை தொடர்பு கொண்டு இப்பொழுது எங்கிருக்கிறது என்று கேட்டார் (சில நல்ல உள்ளங்களும் உள்ளன ) எல்லாப் பேருந்துகளும் தாமதமாய் வந்துசேர நான் போகவேண்டியது மட்டும் படுவேகமாய் ரொம்பதூரம் போய்விட்டது ஒரு பத்து நிமிடத்திற்க்குள் (A.C la போக குடுத்து வைக்கல ).

                  இப்போ என்னமா பண்ண ? நான் வேணும்னா உனக்கு ஒரு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ல போக ஏற்பாடு பண்றேன் , இப்போ டிக்கெட் கான்செல் பண்ணாலும் நாற்ப்பது % போய்டும் யோசிச்சு சொல்லுமான்னு சொல்றாரு , என்ன பண்ண வீட்டுக்கு போனா போதும்னு சரின்னு சொல்லிட்டேன் . ஒரு வழியா ஒரு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ல உக்கார வச்சுட்டார் , என்னுடைய டிக்கெட் பின்குறிப்பில் எனக்கான காரணம் எழுதுகிறார் " மழையினால் ....வயதுப்பெண் பேருந்தை தவறவிட்டுவிட்டார் , இப்படிக்கு ......." அவருக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை நான் இருந்த அவசரத்துல மறந்துட்டேன் .

                    (A.C.Ticket 570 , U.D Ticket 315 ) .என்னால அரசுக்கு அன்று  255 லாபம் . (எப்படிலாம் கொள்ளை அடிக்குறாங்க !!!). அந்த தீபாவளி அனுபவத்தால் 2009 வருடம் தீபாவளிக்கே நான் போகல . இங்கிருக்கும் அண்ணா குடும்பத்துடன் கொண்டாடிவிட்டேன் .

                    எனக்கு ரொம்ப நாள் ஆசைங்க , நம்ம ஊர்க்காரங்க மட்டும் (நெல்லை , தூத்துக்குடி )சென்னைல எத்தனைபேர் இருக்காங்கனு தெரியனும் . ட்ரைன்ல முன்பதிவு ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே காத்திருப்பு பட்டியல் காண்பிக்கிறது . இத்தனைக்கும் சாதாரண நாளில் கூட முன்பதிவு செய்ய முடியவில்லை . அறுபது நாள் முன்பதிவு தொண்ணுறு நாளாக அதிகப்படித்தியும் நிலைமை அப்படியே உள்ளது . ஒருவருட முன்பதிவு என்று மாற்றினாலாவது எனக்கு டிக்கெட் கிடைக்குமா ?

நான் போன பேருந்து நடுவில் நின்ற கதை அடுத்த பதிவில் ..................
Posted by மதார் at 10:59 AM
Labels: அனுபவம், பேருந்து பயணம்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ▼  April (16)
      • சாவுகளும் சடங்குகளும்
      • அந்திவானம்
      • மாநகராட்சி பேருந்தும் , T .C யும் .
      • அழகு
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் 2
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1
      • கிராமம் நகரம் நான்
      • உள்ளூர் சினிமா VS உலக சினிமா -2
      • உலக சினிமா vs உள்ளூர் சினிமா - 1
      • முகம் தெரியா வில்லன்கள்
      • அம்மாவின் கொழுக்கட்டையும் திருகார்த்திகையும்
      • கூகிளாண்டவரின் தாண்டவ ஆட்டம் (Me Pavam)
      • அங்காடித் தெரு - தெரு கோணல்
      • பிள்ளையாரப்பா நீயே நியாயம் சொல்லு
      • அடுத்த வீட்ல ஆள் இருக்கா?
      • நண்பா இது உனக்காக
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio