skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Saturday, April 10, 2010

அடுத்த வீட்ல ஆள் இருக்கா?

           நீங்க குடியிருப்பது தனி வீடா இல்ல அடுக்குமாடி வீடா . அடுக்குமாடி என்றால் உங்கள் அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் அத்தனை பேரையும் உங்களுக்குத் தெரியுமா ? அவர்களின் முகம் பார்த்த நியாபகம் இருக்கா ? பத்துபேர் நடுவுல உங்களால் அவர்களை சரியாய் அடையாளம் காட்ட முடியுமா ? என்னால முடியாதுங்க . ஒரு பத்து மாதம் பிரெண்ட்ஸ் கூட அப்பார்ட்மென்ட்லதான் தங்கிருந்தேன் . நாங்க ஒரு 5 பொண்ணுங்க . ஒரு ப்ளோர் ல இரண்டு வீடுங்க இருக்கும் . எங்க ப்ளோர் ல இரண்டாவது வீட்ல ஒரு தெலுங்கு குடும்பம் 3 வயசு பையன் அம்மா , அப்பா அவ்ளோதான் . அந்த பையனை நான் 2 முறை மட்டுமே பார்த்திருக்கேன் . மொத்தம் 5 குடும்பம் . அதுல ஒரு குடும்பம் (திருமணமாகி மூன்று வருடம் ஆனவங்க )மட்டுமே எங்ககிட்ட பேசுவாங்க . மத்தவங்க முகம்கூட நியாபகம் இல்லை . எங்களை தப்பித்தவறி படில வச்சு பார்த்துட்டாலே ஏதோ ஜந்து மாதிரி பார்ப்பாங்க . இதுலயும் இந்த அடுத்த வீடு இருக்கே அவங்க 10 மணிவரை தூங்கிட்டு அவங்க வீட்டு பால் , பேப்பர் காணாம போச்சுன்னா உடனே எங்க வீட்டு காலிங் பெல் அடிப்பாங்க . எங்களை பார்த்தா அவருக்கு பால் திருடுற மூஞ்சி மாதிரி இருக்கும் போல , தெலுங்கு பேப்பர் எடுத்து நாங்க என்ன பண்ணப்போறோம் . இப்படி ஒருமுறை அவர் என்னிடம் கேட்க நானும் சரி சின்னக் குழந்த இருக்கேன்னு "do u want milk for ur child " (அவரும் இங்கிலிஷ்லதான் பேசுவாரு ) என்று கேட்டா கதவ சப்புன்னு சாத்திட்டு போயிட்டாரு . (இது 2009 )

           சென்னையில் முதல்முதலில் தங்கி வேலை பார்த்தது கொஞ்சம் அவுட்டர் . சைட் பக்கமே அஞ்சு நிமிட நடையில் ஆபீஸ் அவங்க செலவுல எங்களுக்கு வீடு பார்த்து குடுத்தது . அது கொஞ்சம் குடிசைப்புற மக்கள் வாழுமிடம் . நாங்க இருந்த வீடுமட்டுமே பெரிய வீடு பால் காய்ச்சின கையோடு புது மாலையோடு அந்த வீடு எங்ககிட்ட வந்தது . ஓனர் ரொம்ப நல்ல மனிதர் . எதிர்த்த வீடு பக்கத்துவீடு என்று எல்லாருமே நல்லா பழகுறவங்க . கடையில் இருந்து மார்க்கெட் வரையும் ஒருஒரு இடத்துக்கும் கூடவே வந்து வீட்டு சாமான் எல்லாம் வாங்க துணையா இருந்தாங்க . ஓனர் அப்பப்போ வருவார் அவ்ளோதான் . நாங்க நாலுபேர் தங்கிருந்தாலும் ஓனர் என்கிட்டே நல்லா பேசுவார். ஒருமுறை ரொம்ப முடியாம சைட்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டேன் , ஓனரும் அப்போ வீட்டு பக்கம் உள்ளவங்களோடு தாயபாஸ் விளையாடிக்கொண்டு "என்னமா வந்துட்ட " நானும் உடம்பு சரி இல்லை என்று சொல்லி மேல ரூம் போயிட்டேன் . எவ்வளவோ முயன்றும் வலி தாங்க முடியல கீழ வந்து பக்கத்துக்கு வீட்டு அக்காகிட்ட சொல்றேன் . அரைமயக்கமா போயிட்டேன் உடனே ஓனர் அப்பவே கேட்டேனே சொல்ல வேண்டிதானேனு திட்டிகிட்டே பைக் எடுக்க அவர்தான் அப்புறம் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனார் அங்கே போனா அவ்ளோ கூட்டம் இவர் போய் சொல்லி உடனே ஊசி போட்டு கையோட என்னை மாத்திரையும் சாப்பிட வச்சு மீதம் மருந்துகளும் வாங்கி வீட்ல கொண்டு வந்து விட்டார் .மறுநாள் நான் நேத்து எவ்ளோ செலவானதுன்னு கைல பணத்தோட கேட்க போம்மா நீ பொண்ணு மாதிரி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்லி பணம் வாங்கவே மாட்டேன்னு மறுத்துட்டார் . ஒருநாள் ராத்திரி பெல் அடிக்க நானும் பால்கனியில் இருந்து எட்டி பார்க்க நாந்தான் பாப்பா கொஞ்சம் குடிக்க தண்ணீ குடும்மா என்று சொல்லவும் நானும் தண்ணீர் கொண்டு கீழே போனேன் . அங்கே ரோட்ல ஒரு 20 பேர் இருக்காங்க .இவர் மட்டும் நடுவில் . காலையில் என்ன விஷயம் என்று கேட்டா சைக்கிள ல போன ஏதோ ஒரு பொண்ணுக்கு பஸ் ல மோதி அடியாம் அது விஷயமா கொஞ்சம் தகறாரு போல அதை தீர்க்க இவர் வந்துருக்கார் .அப்போதான் சொன்னாங்க இவர் அந்த ஏரியா தாதா என்று . அவ்வளவு பெரிய மனிதர் என்கிட்டே அவ்ளோ சாதாரணமா பழகினார் . எங்க பொண்ணுங்கள கொஞ்ச பசங்க கிண்டல் பண்ணிய செய்தி தெரிஞ்சி (போன் செஞ்சி போட்டு விட்டது நான்தான் )அவனுங்கள அவர் விட்ட ரைடுல எங்க பக்கமே திரும்ப மாட்டாங்க . அவருடைய நல்ல மனசுக்கே அந்த வீடு காலி பண்ணி வரும்போது அவ்வளவு சுத்தம் செஞ்சி வந்தோம் . அதன் பிறகும் நான் இருந்த இரண்டு இடங்களிலும் ஓனர்கள் வழக்கம்போல கறார் பேர்வழிங்க .அவரை மாதிரி இன்னொரு ஓனர் கிடைக்குறது ரொம்ப கஷ்டம் .

Posted by மதார் at 11:38 PM
Labels: நினைவுகள், வீடு
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ▼  April (16)
      • சாவுகளும் சடங்குகளும்
      • அந்திவானம்
      • மாநகராட்சி பேருந்தும் , T .C யும் .
      • அழகு
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் 2
      • சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1
      • கிராமம் நகரம் நான்
      • உள்ளூர் சினிமா VS உலக சினிமா -2
      • உலக சினிமா vs உள்ளூர் சினிமா - 1
      • முகம் தெரியா வில்லன்கள்
      • அம்மாவின் கொழுக்கட்டையும் திருகார்த்திகையும்
      • கூகிளாண்டவரின் தாண்டவ ஆட்டம் (Me Pavam)
      • அங்காடித் தெரு - தெரு கோணல்
      • பிள்ளையாரப்பா நீயே நியாயம் சொல்லு
      • அடுத்த வீட்ல ஆள் இருக்கா?
      • நண்பா இது உனக்காக
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio