இதுல நான் ரொம்ப பீல் பண்ணது அக்டோபர்ல ஊருக்கு போகும்போது மாலை 6 .30 பஸ் டிக்கெட் ஏற்க்கனவே புக் பண்ணிட்டேன் , நான் ஊருக்கு போகும்போதுதான் சென்னைல மழை , ஓவர் டிராபிக் எல்லாம் வரும் , கோயம்பேடு போற பஸ்ல சும்மா நெருப்பு மேல நிக்குற மாதிரி பயந்துட்டு இருக்கேன் , ஏற்க்கனவே ஒருமுறை பஸ் மிஸ் பண்ண அனுபவம் இருக்கு , சொந்த ஊருக்கு தொல்லைப் பயணங்கள் -1 மறுபடியுமான்னு என் மொபைல் screensaverla இருக்குற இஷ்ட தெய்வம் பிள்ளையார வேண்டிட்டு இருக்கேன் மணி 6 .40 . கோயம்பேடு மார்க்கெட்ல பஸ்,என் பஸ் போயிருக்கும்னு பயம் வேற , ஒருவழியா C .M .B .T போய் இறங்கி ஓட ரெடி ஆறேன், T .C டிக்கெட் குடுமா, சார் எனக்கு பஸ்க்கு டைம் ஆய்டுச்சுன்னு அவசரத்துல சொல்றேன் புரிஞ்சுக்காம டிக்கெட் குடுத்துட்டு போனு சொல்றாரு . நமக்குத்தான் அவசரத்துல விட்டா கை அண்டாலகூட போகாதே , ஒருவழியா டிக்கெட் எடுத்து குடுத்துட்டு சும்மா P .T உஷா ரேஞ்சுக்கு உள்ள ஓடிப்போறேன் , எதுதாப்புல எந்த மலையும் வரகூடாதுன்னு மறுபடியும் பிள்ளையார்கிட்ட விண்ணப்பம் .
சும்மா சொல்லகூடாதுங்க நம்ம பிள்ளையார் என்ன கைவிடல , பஸ் H .D .180 . ஸ்டார்ட் பண்ணி கிளம்ப ரெடியா இருக்கு . போய் ஏறின உடனே பிள்ளையர்க்கு அவ்ளோ நன்றி சொன்னேன் . இங்கயும் S .E .T .C 2 வது முறையா என் டிக்கெட் விசயத்துல தப்பு பண்ணிச்சு . என் நம்பர் டிக்கெட் டைம் க்கு வரலைன்னதும் என்ன தொடர்பு கொள்ளவே இல்ல , மொபைல் நம்பர் எதுக்கு வாங்குறாங்கன்னு தெரியல ? ஒருதடவ கண்டிப்பா டிக்கெட் புக் பண்ணும்போது கேக்க போறேன் .அவசரத்த கூட புரிஞ்சுக்காம அன்னைக்கு என்ன படுத்தின T .C என்னால திட்ட முடியல , இன்னிக்கு திட்டினவர பார்த்து சந்தோசமா இருந்துச்சு . அவங்க கடமைய செய்யட்டும் வேணாம்னு சொல்லல ஆனா நம்ம கஷ்டங்களையும் புரிஞ்சுக்கணும் அவங்க . அக்மார்க் நல்ல பொண்ணுன்னு முத்திரை குத்தின மூஞ்சி என்னோடது என்கிட்டயும் அவங்க கடமை உணர்ச்சி ? கப்பல்ல போற திருட்டு தெரியாது சைக்கிள்ள போற திருட்டுதான் பெருசா தெரியும் . (ஒரிஜினல் வேற நான் மாத்திட்டேன்.)
மழை காலத்திலையும் ஒழுகுற பஸ் , டீசல் ஒழுகுற பஸ் - (அந்த பஸ்ல ஒருநாள் போகும்போது வீடு போற வர உயிர் கைல இல்ல) இந்த மாதிரி பஸ்ல 3 ரூபா டிக்கெட் எடுக்கிறதே பெரிய விஷயம் ........... டீசல் ஒழுகுற பஸ்ல இருக்குற டிரைவர் கிட்ட இத நீங்க டிப்போல சொல்ல மாட்டீங்களானு கேட்டதுக்கு , நாங்க இத போய் எங்க ஆபீசர் கிட்ட சொன்னா ஓட்ட முடியலன்னா வீட்டுக்கு போனு சொல்றாங்கன்னு சொல்றார் . சத்தியமா அந்த டீசல் வாசத்துல எனக்கு மயக்கமே வந்துருச்சு . ஒரு சின்ன பொறி இருந்தா போதும் அந்த பஸ் பத்தி எரிய , மறுநாள் பேப்பெர்ல சென்னையில் ஓடிக்கொண்டிருந்த பேருந்து 80 பயணிகளுடன் நடு ரோட்டில் எரிந்து சாம்பல்னு தலைப்பு செய்தியா வந்திருக்கும் .
கட்டணத்த உயர்த்தி டீலக்ஸ் பஸ், A .C பஸ்னு இப்போ நெறைய ஓடுது , இதுல போக்குவரத்து துறை நஷ்டத்துல இயங்குதுன்னு நியூஸ் வேற . A .C பஸ் பராமறிப்பு செலவு வரவ விட அதிகமாம் , அண்மையில் படித்த செய்தி . இவற்றிக்கு செலவழிக்க தேவைப்படும் பணத்தில் தரமான குறைந்த கட்டண பேருந்துகள் பல வாங்கலாமே !!!!!!!!!!! நாம டீலக்ஸ் மற்றும் A .C பஸ் கேட்கலையே ?????????? என்று யோசிப்பர் நம் அதிகாரிகள் ??????????
