skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, February 14, 2012

யாளி




எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக்க எடுத்து என்னருகிலேயே பலநாட்களாய் அதுவும் தூங்கியது . வழக்கம் போல் போன ஞாயிறு அன்று ஏற்பட்ட ஒருமணிநேர பவர் கட் , புத்தகத்தை கையில் எடுக்க வைத்தது . ஆரம்பித்ததுமே வேகமாய் செல்ல ஆரம்பித்தது . யாளியைப் பற்றிய தேடல் வெளிநாட்டில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாத ஆரம்பம் . உண்மையை சொல்லவேண்டுமானால் புத்தகம் வாங்கும் வரை அந்த உயிரினத்தின் பெயர் யாளி என்று எனக்கும் தெரியாது . கதையில் அதைப் பற்றிய விசாரணைக்கு உட்படும் மனிதர்களைப் போலவேதான் நானும் இருந்தேன் . அது போதி தர்மர் பற்றிய அறிமுகத்தைப் போல் இருந்தது .



தமிழ்நாட்டின் பழமையான பெருங்கோயில்களில் இருக்கும் தூண்களில் கண்டிப்பாய் யாளி இருக்கும் . அடியில் யானையை வைத்து யாளியை பெரியதாய் செதுக்கி இருப்பர் . யாளி என்ற உயிரினம் ஒரு காலத்தில் இருந்ததா அல்லது அது ஒரு கற்பனை உயிரினமா என்ற கேள்விதான் கதை முழுக்க நம்முடனே பயணிக்கிறது . படிக்க படிக்க அதில் சொல்லப்பட்டவை போலவேதான் பல சந்தேகங்கள் மனதில் வருகின்றன . எப்படி கண்ணால் கூட பார்க்காத ஒரு உயிரினத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் கோயில்களில் கொடுக்கப் பட்டிருக்கும் அதுவும் அத்தனை தத்ரூபமாய் இருக்கும் முப்பரிமாண சிலைகள் .

எங்கள் ஊர் சாஸ்தா கோயிலில் ஒரு பெரிய சாமி சிலை இருக்கும் எப்படியும் ஒரு பண்ணிரெண்டு அடி உயரத்தில் இருக்கும் . சாமிக்கு மாலை போட என அவருக்கு பின்னே படிக்கட்டுகள் வைத்திருப்பர் . சாமியின் பெயர் ஆழி . யாளி ,ஆழி உச்சரிப்பில் ஒரே மாதிரியே இருக்கின்றன . யாளி உருவத்தில் பெரிய விலங்கினம் அதாவது கோயில்களில் வடிமைக்கப்பட்டிருக்கும் சிலையின் அடிப்படையில் சொல்வதாய் இருந்தால் யானையைப்போல ஐந்து மடங்கு உருவத்தில் பெரியது . யாளியும் சரி சாமியும் சரி உருவத்தில் பெரியவர்கள் இதில் கூட ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிறது . யாளிதான் மருவி ஆழி யாய் ஆனதோ என்னவோ .இந்தப் பெயர் ஒற்றுமையைக் கூட எளிதில் ஒதுக்கவும் முடியாது . தமிழனின் பழமையான நாகரீகம் என்று சொல்லப்படும் ஆதிச்சநல்லூரில் கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பட்டயம் இன்றளவும் சில வகுப்பு மக்களிடம் திருமணத்தில் அது வழக்கில் உள்ளது . ஆதிச்சநல்லூர் சுற்றியுள்ள பகுதியில் இந்த பழக்கம் இருந்து நான் பார்த்ததில்லை . அதேபோல் அங்கு கண்டெடுக்கப்பட்ட குதில்கள் போல் பல இன்றளவும் மக்களிடம் பயன்பாட்டில் உள்ளது . ஒரு குதிலின் வடிவமே இத்தனையாயிரம் ஆண்டுகளாய் அடுத்தடுத்த தலைமுறையினறினால் கடத்தி வரப்பட்டு இருக்கும்போது யாளி கூட கடத்தி வரப்பட்டு ஆழியாய் மாறியதோ என்னவோ .



கதையினூடே ஹீரோவின் உருவில் கதாசிரியர் மணி எதார்த்த இந்தியாவைப் பற்றி பேசுகிறார் . மக்களின் தொழில் அடிப்படையில் வந்த சாதி அமைப்பு அதன் அடிப்படையில் வந்த குடியிருப்புகள் என்று இலகுவாய் பெரிய விசயங்களை கடத்தி செல்கிறார் . அங்கங்கே வரும் வண்ணப்படங்கள் கதையின் வேகத்தை இன்னமும் கூட்டுகின்றன . எங்கே யாளி எங்கே யாளி என்று நம்மையும் காடு மலை என்று தேட வைக்கிறார் . உண்மையில் யாளி என்ற உயிரினம் இருந்திருக்குமா ? . நம் மூதாதையர் பல விசயங்களை நமக்கு கடத்தியது கல்வெட்டு மற்றும் கற்சிலைகள் மூலமாகத்தானே . அவற்றையெல்லாம் நம்பும் நாம் அதே சிலைகளில் தமிழகம் முழுக்க பரவிக்கிடக்கும் யாளியை மட்டும் கற்பனைச் சிலையாகவே எண்ணுகிறோம் .

ஒருவர் பார்த்து ஒருவர் என்று சிலைகள் வடித்திருந்தாலும் முதல் சிலை எந்த வகையில் வடிவமைக்கப் பட்டது வடித்தவர் யார் என்று படைத்தவரைத்தான் தேடுகிறது .யாருக்குத் தெரியும் ஒருகாலத்தில் டைனோசர் போலவே இதுவும் வாழ்ந்திருக்கலாம் . கதையில் வருவதுபோல் இதுவே டைனசராகவே கூட இருக்கலாம் . தமிழ்நாடு ,ஆந்திரா மாநிலக் கோயில்களில் மட்டுமே இச்சிலைகள் இருப்பதாய் மணி சொல்கிறார் . ஒருவர் கூடவா இதை பற்றிய தேடல் கொள்ளவில்லை .கடலில் புதைந்து போன லெமூரியாக் கண்டத்தைப் போல் நம் யாளியும் சிலைகளிலேயே புதையுண்டு போய்விட்டது . யாருக்குத் தெரியும் ஒரு காலத்தில் நம் யாளியும் ஒரு உயிரினமாய் இவ்வுலகுக்கு தெரிய வரலாம் . டையனோசர் தான் யாளியாகக் கூட இருக்கலாம் அப்படி ஒரு உண்மை இருந்தால் ஆதிச்சநல்லூர் மர்மம் போல நம் யாளியும் மறுபடியும் மண்ணுக்குள் புதைக்கப் படலாம் .தமிழன் சார்ந்த தீர்ப்புகள் ஒருபோதும் திருத்தப்படமாட்டாது .







Posted by மதார் at 9:59 PM 2 comments
Labels: புத்தக விமர்சனம், மணி தணிகை குமார், யாளி

Wednesday, November 2, 2011

மாநகரப் பேரூந்து

மீதிச் சில்லறை வாங்கியதில்
நான்கைந்து நிறுத்தங்களைக்
கடந்த பின்பும் விரல்கள்
எறிந்து நிற்கிறேன் .

விரல் தீண்டலைத்
தீட்டாய் நினைக்கும்
தீட்சிதர் மேலேன்றேன் .

பாதிப் பிரசாதம் காற்றிலே
கரைந்து போகையிலும்
கைகளையடையும் மீதியினில்
கடவுளைக் கண்டேன் .

விரல் பிசையா நடத்துனர்
ஒருவருண்டா என
நித்தம் தேடியே
நிற்கிறேன் மாநகரப் பேரூந்தில் .
Posted by மதார் at 9:13 PM 5 comments
Labels: கவிதை, மாநகரப் பேரூந்து

Friday, May 6, 2011

என் பள்ளி - சின்ன பயணம்

சுமார் எட்டு வருடங்கள் இருக்கும் 2003 பள்ளி முடித்தபின் அந்தப் பக்கமே போகவில்லை . போன வாரம் ஒரு வேலையாய் அண்ணாவுடன் அருகில் இருக்கும் ஊர் போய் திரும்பும் வழியில் என் பள்ளி .அண்ணா என் ஸ்கூல்னா என்றேன் மெதுவாய் போனான் அண்ணா . கேட்டில் நின்றிருந்த என் பிரெண்டின் சித்தப்பா அவரும் அப்பள்ளியில் பணி புரிபவர் .என்னை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார் காதோரம் கொஞ்சம் வெள்ளை முடிகள் புதிதாய் .மகராஜன் அண்ணா என்று எங்களால் செல்லமாய் அழைக்கப்படும் எங்கள் அண்ணன். என் அண்ணா நிறுத்து வண்டியை நிறுத்து என்று கதை தொடங்கிவிட்டேன் ,எங்கே நிறுத்தாமலே போய்விடுவானோ என்ற பயம்தான் .அண்ணா எப்படி இருக்கீங்க என்றேன் கேட்டில் நின்றுகொண்டே. மெதுவாய் பேசிக் கொண்டே உள்ளே சில அடிகள் நடந்தால் என் இயற்பியல் ஆசிரியர் . என்னை பன்னிரெண்டாம் வகுப்பில் செதுக்கியவர் என்றே சொல்லாம் .பள்ளிக்கு தெரியாமல் எங்களுக்கு (பிரெண்ட்ஸ் ) மட்டும் லீவ் நாட்களில் பாடம் எடுத்தவர் .இரண்டு இயற்பியல் புத்தகங்களில் ஒன்றை விடுமுறை நாளிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கும் முன்னே படிக்க வைத்தவர் .இறுதித் தேர்வில் 195 /200 எடுக்க வைத்தவர் . இந்த மார்க் எடுக்க நான் படித்தேன் என்பதைவிடவும் படிக்க வைத்தவர் .இன்று ஒரு பொறியாளராய் அதுவும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும் அளவுக்கு நான் வர இயற்பியலில் வரி வரியாய் என்னை படிக்க வைத்தவர் .அடிக்க மாட்டார் சில வார்த்தைகள் போதும் .

இன்று பள்ளியிலேயே சிறப்பு வகுப்புகள் எடுக்க அனுமதிக்கிறார்கள் போல . நான் போகையில் மாணவிகள் படித்துக் கொண்டிருந்தனர் .பொறாமையாய் இருந்தது அவர்களைப் பார்க்க . சீருடை , இரட்டை சடை என்று ஒரு நிமிடம் அந்த இடத்தில் நான் இருந்து படித்த பொழுதுகள் நினைக்காமல் இருக்க முடியவில்லை . நடுவில் கம்பீரமாய் நின்ற மேடை திசை மாறியிருந்தது . 6 முதல் 8 வரை படித்த ஓட்டு அறைகள் இடிக்கப் பட்டிருந்தன .புதிய கட்டிடங்கள் வரப் போகிறதாம் நல்ல விஷயம் .இருந்தாலும் பாதி அளவு மட்டுமே இருக்கும் சுவர் நல்ல வேப்ப மரக் காற்று பறவைகளின் சத்தம் இனி கேட்காது . ஏழாம் வகுப்பில் இருபது பேர் காது பிடித்து தோப்புக் கரணம் போட்ட வேப்ப மரம் வெட்டப் பட்டிருந்தது . ஒரு மாணவனுடன் நான் போட்டி போட்டுக் கொண்டு படித்த மரம் வெட்டப் பட்டு புதிய கட்டிடம் அங்கேதான் மாணவர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப் பட்டிருக்கும் . பெரிய மைதானம் தெரியா வண்ணம் கட்டிடங்கள் .பத்தாம் வகுப்பில் தமிழ் படிக்காமல் போன குற்றத்திற்காக வகுப்பே இரண்டு கைகளையும் நேராய் தூக்கி அசையாமல் நின்ற இடம் வரிசையில் முதலில் நின்ற எனக்கு கை வலியிலும் படிக்காமல் போய் தண்டனை பெற்ற அவமானத்திலும் கண்களில் நீர் பொலபொலவென வழிந்த இடம் அது தெரியாமல் புதிய கட்டிடம் இருந்தது .

ஜம்முராஜ் சார் இப்போதும் பியூரட்,பிப்பெட் ,பெரிய ஸ்கேல் எல்லாம் உடைக்கிறாரா சார் என்றேன் .நீலகண்டன் சார் எதுவுமே சொல்லாமல் சிரித்தார் .எங்கே இப்போ எல்லாம் யார் மேலையும் கை வைக்க முடியல போலீஸ் ஸ்டேஷன் போயிடறாங்க என்றார் சோகமாய் . ரிசல்ட் எப்படி சார் வருது என்றேன் . 95 % வருது என்றார் இன்னும் சோகமாய் சிரித்துக் கொண்டே . நான் படித்த காலத்தில் SSLC ,HSC இரண்டிலும் 100 % வந்தது வரும் .தொடர்ச்சியாய் மூன்று முறை 100 இரண்டிலுமே வந்து தூத்துக்குடி மாவட்ட சுழற்கேடையம் பள்ளிக்கு பரிசாக வந்தது . ஒருமுறை SSLC யில் தன் ஆங்கில வகுப்பில் ஒரு மாணவர் மட்டும் பெயில் ஆனார் அதனால் 100 % போய்விட்டதே என்று அந்த சார் அன்று முழுவதும் சாப்பிடவே இல்லை .

சின்ன சின்ன அரசியல் ,சண்டைகள் என்று இருந்ததேத் தவிர பெரிய அளவில் எந்தப் பிரச்சனைகளும் வந்ததில்லை . இன்று மானேஜ்மென்ட் சரியில்லையாம் .அந்த அளவு பள்ளியில் பிரச்சனைகள் கேட்கும்போதே கஷ்டமா இருந்தது . நம் பள்ளியில் படித்தோர் நிறைய பேர் நல்ல வேலையில் வெளிநாட்டில் இருக்கின்றனர் . இன்டர்நெட் மூலம் நான் பார்த்திருக்கிறேன் என்று சில மாணவர்களின் பெயர்களைச் சொல்லும்போது நிஜமாகவே அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் . ஒரு ஆசிரியர் எதிர்பார்ப்பதும் அதுதானே . நேரமின்மையால் அரை மணிநேரம் மட்டுமே ஏழு வருடங்கள் படித்த பள்ளியில் எட்டு வருடங்கள் பிறகு என்னால் செலவழிக்க முடிந்தது .இடம் மாறிய வகுப்புகளையும் வெட்டப் பட்ட மரங்களையும் பார்த்துக் கொண்டே வெளிவந்தேன் .மீண்டும் என் பள்ளி SSLC,HSC இரண்டிலும் 100 % வர வேண்டும் சுழற்கேடையம் மீண்டும் பள்ளியை அலங்கரிக்க வேண்டும் .
Posted by மதார் at 10:54 PM 5 comments
Labels: அனுபவம், பள்ளி
« Older Posts
Subscribe to: Posts (Atom)
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My Photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ▼  2012 (1)
    • ▼  February (1)
      • யாளி
  • ►  2011 (15)
    • ►  November (1)
      • மாநகரப் பேரூந்து
    • ►  May (8)
      • என் பள்ளி - சின்ன பயணம்
      • மன்னிக்க மாட்டாயா -6
      • மன்னிக்க மாட்டாயா -5
      • மன்னிக்க மாட்டாயா - 4
      • மன்னிக்க மாட்டாயா - 3
      • மன்னிக்க மாட்டாயா - 2
      • மன்னிக்க மாட்டாயா - 1
      • அழிவை நோக்கி விவசாயம் -ஸ்ரீவைகுண்டம் அணை
    • ►  April (1)
      • இப்படியும் சில மனிதர்கள்
    • ►  March (2)
      • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
      • மறக்க முடியா மரண தருணங்கள்
    • ►  February (1)
      • என்னக் கொடுமை இது ?.
    • ►  January (2)
      • ஆணென்ன பெண்ணென்ன
      • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
  • ►  2010 (88)
    • ►  December (12)
      • மெளன யுத்தம்
      • அது ஒரு மீன் காலம்
      • நான் இன்ன ஜாதி நீ என்ன ஜாதி
      • மண்ணும் உறவும் நகர்ப்புறமும்
      • தோசையம்மா தோசை
      • அம்மா கை வைத்தியம்
      • பேச்சிலர் குட்டி குட்டி சமையல்
      • அரசுத்துறையின் அவலங்கள்
      • பளபளக்கும் அசன்டாஸ் பரிதவிக்கும் தரமணி
      • விவசாயம் அது ஒரு சுவாரசியம்
      • நவீன லாட்டரி சீட்டு கொள்ளை
      • நந்தலாலா - இன்னும் செதுக்கிருக்கலாம்
    • ►  November (7)
      • மலை மாலை பக்தி உல்லாசப்பயணம்
      • அழகை ரசிக்கிறது தப்பா ?
      • டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும் - எச்சரி...
      • சமையலோ சமையல் - வாழைப்பூ செய்முறை படங்களுடன்
      • நட்பு - எதுவும் முடியும்-2
      • நட்பு - எதுவும் முடியும்-1
      • அவள் அவளாய் உன்னவளாய்
    • ►  October (3)
      • IRCTC -பொங்கலோ பொங்கல்
      • குலசை தசராவும் - நவராத்திரி கொலுவும்
      • வீடு வாடைகைக்கு
    • ►  September (8)
      • வினவாக் கூட்டமும் ஜால்ரா கோஷ்டியும்
      • ஒரு கிராமத்து காதல் கதை - 3 (END)
      • புரளிதேசத்தின் சுயரூபம்
      • ஒரு கிராமத்து காதல் கதை - 2
      • ஒரு கிராமத்து காதல் கதை - 1
      • இமயமலை சில சந்தேகங்கள் ........
      • வினவு , மற்றும் சாந்தி அக்கா அவர்களுக்கு
      • தண்ணீரும் கண்ணீரும்
    • ►  August (6)
      • மாடுகளுக்கும் பாசம் , உணர்ச்சிகள் உண்டு
      • ராங் கால்ஸ் -புது முயற்சிகள்
      • என்னப் பெண் இவர்?
      • சின்ன பொய் போதும்
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Sociable

Followers

Labels

  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அனுபவம் (31)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • ஆசைகள் (1)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (11)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (6)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குளம் (2)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சினிமா (4)
  • சிறுகதை (1)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • ஜாதி (4)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (9)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (1)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (1)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • வினவு (2)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.
2010 blog rank 94

Popular Posts

  • அழிவை நோக்கி விவசாயம் -ஸ்ரீவைகுண்டம் அணை
    ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஒவ்வொருமுறை ஊர் போகும்போதும் அணையில் எவ்வளவு நீர் இருக்கிறது அணை எப்படி இருக்கிறது இதை பார்ப்பதே ஒரு வேலையாய் இருக்...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio