skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Wednesday, March 17, 2010

என்டோஸ்கோபி என்ற நரக வேதனை (பெண்களுக்காக )

                                        இன்றைய காலகட்டங்களில் பல நோய்கள் புதிது புதிதாய் மனிதர்களுக்கு வந்து கொண்டுள்ளன . அதிலும் பலவற்றை இதுதான் என்று மருத்துவர்களால் கூட கண்டறியப்பட முடியா நிலையில் உள்ளன . நோயின் அறிகுறிகள் கூட மருத்துவருக்கு தெரிந்த வேறு நோயின் அறிகுறிகளுடன் ஒத்துப்போவதால் சில நேரங்களில் நமக்கு வந்த நோயிற்கு தேவையில்லாத மருந்துகளுக்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறோம் . நானும் இதில் பாதிக்கப்பட்டவள் என்பதே இப்பதிவு எழுதக் காரணம் .

                                        எனக்கு சில மாதங்களாய் அடிவயிற்றில் வலி இருந்து வந்தது . எப்பொழுதும் இருக்காது ஆனால் காலையில் கண்விழித்ததும் வலியின் உணர்வுகளே முதலில் நான் உணர்வேன்.சரி ஆகி விடும் என்று சில மாதங்கள் கண்டு கொள்ளவில்லை . ஆனால் வலி மட்டும் போவதுபோல் தெரியவில்லை . வலியின் அளவு மட்டும் கூடிக்கொண்டே போனது . இதற்குமேல் தாமதிக்கக்கூடாது என்று  புகழ்பெற்ற ஒரு மருத்துவமனைக்கு சென்றேன் . என்னை பரிசோதித்துவிட்டு அல்சர் இருக்கலாம் என்று சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்தனர் . எனக்கு அல்சர் வர வாய்ப்புக்கள் குறைவு , என்னால் பசி தாங்க முடியாது என்பதால் வேளைக்கு ஏதாவது சாப்பிட்டு விடுவேன் . வேறென்ன பண்ண நமக்கும் அல்சர் வந்திடுச்சு போல என்று மாத்திரைகளும் உட்கொண்டேன் . எந்த முன்னேற்றமும் இல்லை மீண்டும் சென்றால் வேறு ஒரு மருத்துவர் பணியில் இருக்க அவர் வேறு மாத்திரை எழுதிக்கொடுக்க மறுபடியும் எந்த முன்னேற்றமும் இல்லை . மூன்றாம் முறை போனபிறகு ஸ்கேன் மற்றும் என்டோஸ்கோபி எடுக்க வேண்டும் என்றனர் . ஸ்கேன் பத்தி தெரியும் என்டோஸ்கோபி பெயர் முதல்முறை கேட்கிறேன் . டாக்டரிடமே அதுபற்றி நான் கேட்க ஸ்கேன் என்றால் ரூம் வெளிப்புறம் மட்டும் பார்ப்பது போல் . என்டோஸ்கோபி என்றால் ரூம் உள்புறம் பார்ப்பது  இதில் எல்லாமே தெளிவாய் விளங்கிவிடும் என்றனர் . நானும் என்டோஸ்கோபி பண்றேன் என்று சொல்லி வந்தேன் .

                                     அடுத்த வாரம் திங்கள் காலையில் மீன் குழம்பு 2 தோசை , பால் என்று வயிறு முட்ட சாப்பிட்டு சென்றால் என்டோஸ்கோபி பண்ண வெறும் வயிறில் வரவேண்டும் . முன்னிரவு 10 மணிக்கு பிறகு எதுவும் சாப்பிடக் கூடாது . காலையில் பல்துலக்கியதும் அப்படியே வர வேண்டும் பச்ச தண்ணீர் கூட குடிக்ககூடாது என்றனர் . என்னால  முடியல இத முதல்லயே சொல்லக்கூடாதா என்று மனதினுள்ளே திட்டிக்கொண்டு வந்தேன் . அவர்கள் சொன்னபடியே வெறும் வயிறில் மறுநாள் போய் சேர்ந்தேன் . காலையில் நான்கு பேருக்கு என்டோஸ்கோபி . ரூம் உள்ளே எனக்கு முன்பு சென்றவர்கள் வெளிவர அரைமணி நேரத்துக்குமேல் ஆனது . எதுவும் புரியாமல் தனியாய் காத்திருக்க 11 மணிக்கு என்முறை வந்தது . நர்ஸ் தொண்டை மரத்துப்போக வாயில் ஏதோ ஸ்ப்ரே மாதிரி அடித்துவிட்டார்  பின்பு அங்கிருக்கும் ஒரு கருப்பு ரப்பர் ட்யூப் கழுவிக்கொண்டே செய்முறை விளக்கம் குடுக்க எனக்கு வாந்தியே வந்திடும் போல இருந்தது . நல்ல வேலை வயிற்றில் ஒன்றுமில்லா காரணத்தினால் வரவில்லை . அந்த ஒரு ரப்பர் ட்யூப்தான் எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள் .
                                       கண்ணாடி , சில்வர் க்ளாஸ் நடைமுறையில் இருந்தவரையில் நான் வெளி இடங்களில் டீ காபி கூட குடிக்க மாட்டேன் , ஒருவர் குடித்த டம்ளரில் நானும் குடிக்கனுமா என்று எவ்வளவு தேவையாய் இருந்தாலும் குடிக்க மாட்டேன் .சிறிது நேரத்தில் உள்ளே வந்த டாக்டர் என்னை பார்த்ததும் அதிர்ச்சியாய் "This girl is looking so young ". யாரு இந்த பொண்ணுக்கு என்டோஸ்கோபி பண்ண சொன்னது என்று கேட்க்க உள்ளுக்குள் அண்டசராசரமும் கலங்கியது . அதற்க்கு முன்பே அங்கிருக்கும் வயர் இதர உபகரணங்கள் பார்த்து பயந்து போயிருந்தேன் . டாக்டர் என்னிடம் என்னமா பண்ணுற என்று கேட்க்க வாயில் அடித்த மருந்தில் பேச முடியாமல் சிவில் இஞ்சினீயர் என்று சொல்ல சுவரை காட்ட சிரித்து விட்டார் . பின்பு என்டோஸ்கோபி பற்றியும் என்னுடைய ஒத்துழைப்பு வேண்டும் என்றும் விளக்க நாம உயிரோட வெளில போவோமா என்று சந்தேகம் வர ஆரம்பித்தது . உள்ளிருக்கும் காற்றை வெளிவிடக் கூடாது நீயும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சீக்கிரம் முடியும் இல்லைஎன்றால் நீதான் கஷ்டப்பட வேண்டிருக்கும் என்று சொல்ல பயத்தில் ஆயத்தமானேன் .


                                   வாய்  மூடாமலிருக்க வாயில் பெரிய வளையம் மாதிரி ஒன்றை வைத்துவிட்டனர் .அதன் நடுவில் இருக்கும் துளை வழியாய் நடுவிரல் சைஸ் இருக்கும் ஒரு ரப்பர் குழாயை வாயில் வைத்து உள்ளே இழுக்க சொல்ல நானும் ஏதோ இழுத்துவிட்டேன் . அதன் பிறகு அந்த ரப்பர் ட்யூப் குடலின் உள்ளே போக போக உள்ளிருக்கும் காற்று வாய் வழியாய் என்னையும் மீறி வெளிவர டாக்டர் காற்றை வெளிவிடாதே என்கிறார் . என்னால் வாய் திறந்த நிலையில் எப்படி வெளிவரும் காற்றை தடுக்க முடியும் ? அந்த ரப்பர் ட்யூப் நுனியில் இருக்கும் கேமரா அருகில் இருக்கும் திரையில் படம் காட்டுகிறது . டாக்டர் அதை பார்த்துக்கொண்டே 30 , 40 என்று சொல்ல எனக்கு மயக்கமே வருது .அத்தனை cm உள்ளே போய்க்கொண்டிருக்கிறது . ஒருவழியாய் முடித்து பாதி வெளிவரும்நிலையில் அவருக்கு சந்தேகம் அந்த பகுதி பார்த்தோமா என்று நர்ஸ் இடம் கேட்க்க அவரும் பார்த்தோம் என்று சொல்லியும் சந்தேகம் தீராமல் மறுபடியும் உள்ளே விடுகிறார் . அட பாவி என் வயிறு என்ன விளையாட்டு திடலா என்று மனதினுள்ளே வலியுடன் திட்டுகிறேன் . அந்த ரப்பர் ட்யூப் போகும் பாதை நன்று உணர முடியும் . வயிறுக்குள் ஏதோ சுத்திசுத்தி போற மாதிரி இருக்கும் . ஒருவழியாய் முடித்துவிட்டு என் ரிப்போர்ட் கையில் குடுத்து இன்னும் அரைமணி நேரம் கழித்தே தண்ணீர் கூட குடிக்க வேண்டும் என்றனர் . தொண்டையில் அவ்வளவு வலி . ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது எனக்கு குறைவான நேரத்திலேயே முடிந்திருந்தது .என்டோஸ்கோபி பண்ண என்னை மாதிரி யாரும் தனியாய் செல்ல வேண்டாம் . துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லுங்கள் .                                    

                               ரிப்போர்ட் பார்த்த டாக்டர் உனக்கு நார்மல் என்று வந்திருக்கிறது எதுவும் பிரச்சனை இல்லை என்று சொல்லி சில வலி நிவாரண மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார் . அதன் பின்பு கொஞ்சம் வலி குறைந்தது . ஆனால் என்னால் அந்த நிமிடங்களின் வலியை மட்டும் மறக்க முடியவில்லை இன்று வரைக்கும் அதை நினைத்தால் முகத்தில் ஒரு பயம் வந்துபோகிறது . அது முடிந்து ஒரு 6 மாத காலமே ஆகிறது , அந்த வேதனையான நிமிடங்களில் கண்களில் கண்ணீர் வர என் அம்மாவைத் தவிர வேறு யார் முகமும் தெரியவில்லை . பதிவுலம் வந்த பிறகு ஒரு நாள் ஒரு பதிவு படித்த பிறகே அந்த வலியின் பெயர் "குடல் உளைச்சல் "என்று தெரிந்தது ,படிக்க இங்கு  கிளிக் செய்க . என்டோஸ்கோபி பற்றி மேலும் தெரிய இங்கு .அதன் பின்பு நண்பன் ஒருவன் காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் ஒரு 1 லிட்டர் குடி ரொம்ப நல்லது என்று சொல்ல அன்றிலிருந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன் . என்னால் 1 லிட்டர் எல்லாம் குடிக்க முடியல 1 /2  லிட்டர் குடிக்குறேன் . நம்புறீங்களோ இல்லியோ என் வயிற்று வலி போன இடம் தெரியவில்லை . பெரிய மருந்துகளால் தீர்க்க முடியா வியாதி ஒரு அருகம்புல்லில் தீர்ந்து போகும் என்று சொல்வரே அது மாதிரியே வெறும் தண்ணீரில் வலி போயிற்று .
                                 இன்று AC  இல்லாத அலுவலங்கள் மிகக் குறைவு . ஒரு குளிர்ந்த சூழல் நமக்கு இயல்பாய் வரும் தாக உணர்வை குறைத்து விடுகிறது . பல பேர் சாப்பிடும் நேரம் தவிர பல நேரங்களில் தண்ணீர் குடிப்பது இல்லை .தண்ணீர் நமது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்றும் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது என்றும் எங்கோ படித்த நியாபகம் . ஆனால் தண்ணீர் நிறைய குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம் . வந்த பின் முழிப்பதை விட வருமுன் காப்பது நம்மால் முடியும் தானே ?. இப்பதிவின் மூலம் சொல்ல வருவது ஒரு டாக்டர் என்று இல்லாமல் 2  டாக்டர்களிடம் பரிசோதிக்கலாம் . நோயின் தன்மையை உணர்ந்து மாத்திரைகளும் பரிசோதனைகளும் எடுப்பது நல்லது , இல்லை என்றால் என்னைப்போல் தேவையில்லா வலிகளைத் தாங்க வேண்டி வரும் . எதுவுமே முதலில் பார்ப்பது நல்லது . நான் இதில் அலட்சியமாய் மற்றும் தனியே ஹாஸ்பிட்டல் போன காரணங்கள் வேறு .
Posted by மதார் at 1:19 PM
Labels: என்டோஸ்கோபி, வலி
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ▼  March (20)
      • பெண்ணே இது நியாயமா ?
      • பெண்ணாய் பிறத்தலே பாவமோ
      • எப்போ அத்தே ஊருக்கு வருவ?
      • நானும் பொங்கலும்
      • ஹைக்கூ கவிதைகள்
      • கல்யாணம்
      • உணர்தலும் புரிதலும்
      • தாமிரபரணி
      • என்டோஸ்கோபி என்ற நரக வேதனை (பெண்களுக்காக )
      • சொந்த வீடு கட்டுமுன்- கவனிக்க வேண்டியவை
      • பெயர் அர்த்தம் கூறுக !
      • பள்ளிக்காலமும் நானும் -4 ( முற்றும் )
      • பள்ளிக்காலமும் நானும் -3
      • பள்ளிக்காலமும் நானும் -2
      • பள்ளிக்காலமும் நானும் -1
      • சொந்த வீடு வாங்குமுன் -கவனிக்க வேண்டியவை
      • தமிழ்மணம் , தமிலிஷ் -ஓட்டு வியாபாரம்
      • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
      • திருந்தவே மாட்டீங்களா ?
      • சில்லறை கொடுக்கா சில்லறை மனிதர்கள் .
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio