மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை .
1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இருக்க மாட்டர். இதன் சரியான அர்த்தம் இதுநாள் வரையில் எனக்கும் தெரியாது . சமீபத்தில் என் தோழியின் சகோதரர் நிச்சயதார்த்த விழாவில் பேசிய ஒருவர் சொன்னது சிந்திக்க வைத்தது . அதை இப்பொழுதே சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும் . மேற்சொன்ன பழமொழியின் அர்த்தம் என்னவென்று சொல்ல முடியுமா ?
2 . ஒரு பாலம் சரியாய் 25000 டன் எடை மட்டுமே தாங்கும், மேற்கொண்டு ஒரு கிராம் அதிகமாய் வைத்தாலும் பாலம் உடைந்து விடும் . ஒரு லாரி சரியாய் அதன் எடையுடன் சேர்த்து 25000 டன்னுடன் பாலத்தில் செல்கிறது . சரியாய் நடுபாலத்தில் லாரி செல்லும்பொழுது ஒரு புறா பறந்து வந்து லாரி மேல் உட்காருகிறது . புறாவின் எடை 25 கிராம் ஆனால் பாலம் உடையவில்லை ஏன்?
3 . ஒரு கூடையில் 6 ஆப்பிள் பழங்கள் உள்ளன . அங்கு ஆறு குழைந்தைகளும் உள்ளன . ஆளுக்கு ஒன்றாய் குடுத்த பின் கூடையில் ஒரு பழம் உள்ளது எப்படி ?
