
ஒரு பெண்ணால் விரும்பப்படும் ஆணா நீங்கள் ? அப்படி இருந்தால் பெருமை கொள்ளுங்கள் ஒரு பெண்ணின் மனதிற்கு நீங்கள் ஒரு சிறந்த நம்பிக்கையான ஆணாய் தெரிந்தமைக்கு .பெண்ணின் மீதான சமுதாயத்தின் பார்வை இன்றளவும் மாறவில்லை . ஒரு பெண் வளரும்போதிருந்தே ஆண்களின் மீதான வெறுப்பும் அவள் மனதில் சேர்ந்தே வளருகின்றன .
பதின்ம வயதுகளில் பலவற்றிற்கு அர்த்தம் தெரியா வயதிலேயே தன் சுற்றத்தார் , அண்டைவீட்டார் , தெரியாதோர் போன்ற பல வகைகளிலும் உள்ள ஆண்களிடமிருந்து அவள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம் . இதில் பல ஒரு வயது வந்த பின்னரே புரியும் எந்த மாதிரியான நோக்கத்திற்கு தான் உட்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று .
அது புரியும்பொழுது கூட்டிற்குள் சுருளும் நத்தை போல் தன்னுள்ளே சுருண்டு போவாள் . எவ்வளவு கொடிய உலகினுள் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று ஒருஒரு நொடியும் பயத்தினூடே கடந்து போவாள் . குமரன் முதல் கிழவன் வரையினாலான பருவத்தோரின் உடம்பாலும் மனதாலும் வரும் வன்முறைகளினுடே வளர்ந்து வருவாள். சில நேரங்களில் பல மனிதர்களினுடே நடுவில் தனக்கு நடக்கும் வன்முறையில் தன் எதிர்ப்பைக்கூட காட்ட முடியா நேரத்தில் தன் பிறப்பையே வெறுப்பாள். ஒருஒரு பெண்ணிர்க்குள்ளும் ஆண்களின் மீதான வெறுப்பு நிச்சயமாய் ஒளிந்து கொண்டிருக்கும் .
வெளி இடங்களில் ஒரு பெண்ணின் கோபம் உங்களை கோபப்பட வைக்கிறதா ? அக்கோபம் காரணமாய் அப்பெண்ணின் மீது எரிச்சல் வருகிறதா ? அது அவளின் அந்த ஒருநிமிட ஒரு ஆணின் செயலின் வெளிப்பாடு அல்ல . தன் எதிர்ப்பைக் காட்ட தன்னால் முடியுமென்ற எண்ணம் மனதினில் வருகையில் ஒரு பெண்ணிடமிருந்து வெளிப்படும் கோபம் தீச்சுவாலையாய் சுட்டெரிக்கும் , அது அந்த ஒருநிமிட கோபத்தின் சக்தியல்ல . பல வருடங்களாய் மனதினுள் பூட்டிவைத்திருக்கும் கொதிகலனின் வெளிப்பாடு .
இத்தனையும் தாண்டி ஒரு பெண்ணின் மனதால் நீங்கள் கவரப்பட்டவரா ? அப்பெண்ணினாலேயே காதல் சொல்லப்பட்டவரா ? ஒரு பெண்ணினால் காதலிக்கப்படும் ஆணா நீங்கள் ? பெருமை கொள்ளுங்கள் அவள் பால் நீங்கள் கவரப்பட்டதற்க்கு................ ஒரு பெண்ணின் தேவை பணம் , பொருள் , வீடு , கார், பைக் etc ..மட்டும் அல்ல , அதையும் தாண்டிய ஒரு ஆத்மார்த்தமான அன்பு . முதலில் அதை திகட்டும் வரை கொடுங்கள் பின்பு அவளிடத்தில் மேற்சொன்னவைகளின் மீதான ஆசை குறைந்துவிடும் .அன்பு கொடுத்து பெறுவதில் ஆண் ,பெண் இருவருமே சமம் என்றாலும் இன்றளவும் ஆணைச் சார்ந்தே ஒரு பெண்ணின் வாழ்வியல் நிர்ணயிக்கப்படுகிறது .பெண்கள் பல வகை அதில் ஒருவகையான பெண்களைப் பற்றி மட்டுமே இப்பதிவு . இதில் எவ்விதமான பெண்ணியமோ மண்ணியமோ இல்லை . ஒரு சராசரி பெண்ணின் மன உணர்வுகளும் வலியும் மட்டுமே .
