"குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் "
"என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற முடியுமா "
"படிச்சுருவேமா "
"சரி பண்ணு "
வாழ்க்கையில் எத்தனையோ விதமான மனிதர்களை சந்திக்கிறோம் அவர்கள் மூலம்தான் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் எத்தனை . ஒருசில மனிதர்களை பார்த்தவுடனே அவர்களை விட்டு விலகிவிடத் தோணும் சிலருடன் நட்பு பாராட்ட தோணும் . அப்படி நட்பாய் இருக்கும் ஒருவரை பற்றி வேறுவிதமாய் கேள்விப் படுகையில் பெரும்பாலானோர் அவர்களை விட்டு விலக ஆரம்பிப்போம் . அப்படி விலக நினைத்து எண்ணத்தை மாற்றிக் கொண்டு கொஞ்சம் மாற்றித்தான் பார்ப்போமே என்று பழகிய நண்பன் ஒருவனுடனான பேச்சுதான் மேலே உள்ளவை .
பிறந்ததிலிருந்தே அண்ணா , நண்பர்கள் , படிப்பு என அத்தனையிலும் பெண்களைவிடவும் ஆண்களுடனே வாழ்க்கை அமைந்தது . ஓரளவு ஆண்களைப் பற்றி புரிதலும் இருந்தது . என்னுடன் முதல் கம்பெனியில் வேலை பார்த்தவன் பார்க்கவே குழந்தை போல் பால் வடியும் முகம் . ஒரே வருட கல்லூரி படிப்பு ஒரே துறை வேலையிலும் ஒரே துறை என பேச நிறைய விஷயங்கள் . வேலையிலும் நாங்கள் நால்வர் ஒரே இடம் , நானும் என் ப்ரெண்டும் client சைடு அவனும் இன்னொரு பையனும் contractor சைடு . பார்த்த வேலை சிவில் கட்டிட துறையில் pile foundation என்பதால் நாள் முழுவதும் நால்வரும் ஒரே இடத்திலேயே இருந்து பார்த்த கொஞ்ச நாளிலேயே நல்ல நட்பு எங்களுக்குள் . பெரிய இடத்து பிள்ளை என்பது அவனை பார்த்த உடனே யாராலும் கண்டு பிடிக்க இயலும். கோடிகளுக்கு சொத்து பெண்பிள்ளைகள் இல்லா வீடு .
அவனுக்கு இருந்த இருக்கிற பெண் தோழிகள் பற்றி சொல்லுகையில் வயதுக் கோளாறு கொஞ்ச நாள் இப்படி இருப்பான் என்று அதிகம் கண்டுகொள்ளுவதில்லை . கொஞ்ச நாளிலேயே இன்னொருவன் மூலம் இவனின் இன்னொரு முகம் தெரிய வருகையில் அதிர்ச்சி அதுவரையில் அந்த மாதிரியான ஒரு மனிதனிடம் பேசினது கூட இல்லை . அப்பொழுது அவனுக்கு இருந்த அரியர் பேப்பர் அவனை எழுதச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தேன் . தேவையான material வரை குடுத்து தினமும் அவனை படிக்க சொல்லி நான குடுத்த டார்சரில் அவன் கண்ணீர் விடாத குறைதான் .
என்னுடன் இத்தனை நாளாய் நட்பாய் இருந்த ஒருவனைப் பற்றி கேள்விப் படுகையில் அதற்க்கு மேல் அவனுடன் தொடர வேண்டிய நட்பை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன் . இதே ஒரு நான்கு வருடங்கள் பழைய ஆளாய் நான் இருந்திருந்தால் கண்டிப்பாய் அவனுடனான நட்பை அந்த உடனே முறித்திருப்பேன். என்னுடன் அவன் பழகிய அந்த ஆறு மாதங்களில் ஒருமுறை கூட தப்பாய் ஒருவார்த்தை கூட அவன் பேசிருக்கவில்லை.பின்பு எப்படித்தான் முறிப்பது ? முறிக்க காரணம் தேடிக் கொண்டிருந்த வேளையில் அவனே அதைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான் .
"நான் ரொம்ப கெட்டவன் மா"
"அப்படியா எப்படி "
"நான் .................பண்ணிருக்கேன் "
"தெரியும் "
"தெரிஞ்சும் எப்படிமா என்கிட்ட பேசுற "
"நீ எப்படி வேணா இருந்துட்டு போ அது எனக்கு தேவை இல்லை ஆனால் என்கிட்ட இதுவரைக்கும் நீ நல்லவனாத்தான் பேசிருக்க இனியும் அப்படியே இரு முடிஞ்சா நீ பண்ற தப்பை நிறுத்து அது பற்றி என்கிட்ட எதுவும் என்கிட்ட சொல்லாத என்னால உன்னை அப்படி கற்பனை கூட செஞ்சு பார்க்க முடியல உன் அம்மாவுக்கும் குடும்பத்துக்கும் கர்த்தருக்கும் துரோகம் பண்ணாதே "
"இல்லமா என்னால இது இருந்து வெளில வர முடியும்னு தோணல "
"சந்தோசம் எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா நீ இதுல இருந்து வெளியே வருவே , சரி நீ இப்படி மாற என்னக் காரணம் ? "
அவனுடன் பழகிய பெண்கள் அவனை தன் வலையில் விழ வைக்க முயற்சி பண்ணியதில் இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டது நான் மட்டுமே என்று பின்னாளில் தெரிய வந்தது .அவனுடன் டிப்ளமோ கல்லூரியில் ஒரே அறையில் தங்கிருந்த சீனியர் மாணவரின் தவறான பழக்கம் பார்த்து பார்த்து நாளடைவில் இவன் பழகிப் போனான் . பழக்கத்தை விட முடியாமல் அன்று முழித்துக் கொண்டிருந்தான் . அப்படியே ஓங்கி அறையலாம் போல் வந்த கோவம் (அத்தனையும் போனில் சொல்லிகொண்டிருந்ததால் அறைய முடியவில்லை ) கடந்த கால வாழ்க்கையை கேட்டவுடனே அடங்கிப் போனது .
அடுத்து நான் என்ன செய்தேன் நாளை வரும் கொஞ்ச பெருசா பதிவு போய்விட்டதால் இரண்டு பகுதிகளாய்.
