skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Sunday, December 5, 2010

நந்தலாலா - இன்னும் செதுக்கிருக்கலாம்

பதிவர்கள் சொல்வதை  வைத்து ஒரு படத்தை தீர்மானிக்க முடியாது என்பதை அங்காடித் தெருவிற்கு பிறகு நந்தலாலாவில் தெரிந்து கொண்டேன் . என்னவொரு ஆர்பாட்டம் இரண்டு படங்களுக்கும்  அங்காடித் தெரு பற்றி ஏற்கனவே எழுதியாச்சு . நந்தலாலாவைப் பற்றி பார்க்கலாம் , எல்லோரும் நிறைய இதைப் பற்றி புல்லரிக்கச்  சொல்லி முடித்தாயிற்று . பையனும் மிஷ்கினும் பேசிக்கொள்ளும் இடத்தில் உன் அம்மாவும் ஓடிப்போய்ட்டாலா என்று கேட்டு சிரிக்கும் காட்சியில் ஓடிப் போன தந்தையைப்   பற்றி ஒரு வார்த்தை இல்லை . தந்தை ஓடிப்போவது ஒன்றும் பெரிய விசயமில்லை தாய் ஓடிப்போனால் மட்டும் தான் நாம் பெரிதாய் பேசிக் கொள்வோம் என்று நம் பாரம்பரியத்தை மீண்டும் ஒருதரம் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் இதற்க்கு ஒரு சபாஸ் போடலாம்  . தாயாவது மகனுக்கு பணம் அனுப்பியாவது குறைந்தபட்சம் புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறாள் தகப்பன் ???? இது பற்றியெல்லாம் நாம் பேசக் கூடாது .

காயம் பட்ட பெண் மிஸ்கின் நெஞ்சில் செல்லமாய் ஏன் குத்திக் கொண்டு ஓடினாள்? காட்சியோடு அது ஒட்டாமல் தனியே தொங்கியது . ஒரு மசாலா படத்தில் வரும் நாயகி நாயகன்  நெஞ்சில் செல்லமாய் குத்துவதே மிகைப்படுத்தப்பட்ட சினிமாத்தனமாக தெரிகையில் எதார்த்த சினிமாவில் அந்தக் காட்சி தேவைதானா ?

அடுத்து வரும் சாலையோர விபச்சாரி , காலத்தின் சூழ்ச்சியால் விபச்சாரி ஆன பின் அதிலிருந்து மீண்டு வந்த பின்பும் வயிற்று பசிக்காக மீண்டும் ரோட்டில் நின்றேன் என்று பச்சை பசேல் இடத்தில் காட்டி இருப்பது சரியா ? காய்ந்த தண்ணீரே இல்லாத ஒரு வறண்ட பூமியில் விவசாயமே பொய்த்துப் போன கதைக்  களமாய் இருந்து (தாஜ்மகால் படத்தின் சூழல் )பிழைக்க வேறு வேலை இல்லாமல் வயிற்றுப் பசிக்கு ரோட்டில் நின்றேன் என்றால் ஏற்றுக் கொள்ளலாம் . அதிலும் அவரின் திருத்தப் பட்ட புருவம் ? நடை உடை பாவனைகள் மற்றும் மாற்றி விட்டால் மட்டுமே ஒரு பெண் கிராமத்து பெண்ணாக மாறி விடுவாளா ? எதார்த்த சினிமாக்களில் வரும் பெண்களின் திருத்தப் பட்ட புருவம் அப்பெண்ணை முழுவதுமாய் கதையோடு ஒன்றி பார்க்க முடிவதில்லை . அது என்னவோ கிராமத்துக் கதைகளில்  வரும் நாயகன் எல்லாம் சலூன் கடையே இல்லாத ஊரில் பிறந்தவன் மாதிரி தாடியும் கண் மறைக்கும் முடியும் லுங்கியுமாகவே வருகின்றான்  .ஆனால் பெண்கள் மட்டும் நேர்த்தியாய் உடுத்திக் கொண்டு திருத்தப் பட்ட (கண்டிப்பா பார்லர் இருக்கனும் ) புருவங்களுடன் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முகக் கலையோடு வருகின்றனர் .இதை எதார்த்த சினிமா இயக்குனர்கள்தான் விளக்க வேண்டும் .

மிஸ்கின் தன் வீட்டில் போய் தாயைப் பற்றி பேசும் வார்த்தைகள் அதெப்படி வார்த்தைக்கு வார்த்தை டி போட்டு பேச முடிகிறதோ தெரியவில்லை . ஒரு பெண்ணை டி போட்டு பேசும் உரிமை அவள் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நினைக்கும் எனக்கு  அந்தக் காட்சியில் மிஸ்கின் மேல் வந்த ஆத்திரம் அப்பொழுதும் தந்தையைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை தாயைப் பற்றி அதற்குமேல் அசிங்கமாய் பேசிவிடவும் ஒரு வார்த்தையும் மிச்சமுமில்லை  .

பையன் தன் தாயை வேறு குடும்பமாய் பார்த்தவுடன் ஸ்னிக்தாக்கு அத்தனை முத்த மழை பொழியும் அளவுக்கு அந்தப் பையனின் மனதை கொள்ளை கொள்ளும்படியாய் அவருக்கு ஒரு காட்சியும் இல்லையே கூட பயணிக்கும் சக பயணி என்ற அளவிலேயே இருந்தது . கடைசியில் ஸ்னிக்தா சிறுவனின் தாயாய் காட்டி இருப்பது போல் மிஸ்கின் அப்பெண்ணை மணந்து கூடவே சிறுவனுக்கு தந்தையாகவும் மாறி இருக்கலாம் . அது சரி பையன் தாயுக்கு மட்டுமேதானே ஏங்கினான் தந்தைக்கு இல்லியே . அதுவுமில்லாமல் விபச்சாரியை சிறுவனுக்கு தாயாக்குவது எளிது தனக்கு மனைவியாக்குவது கொஞ்சம் கஷ்டம்தான் . புரட்சி வாசலுக்கு வெளியே மட்டும்தானே தவிர  வீட்டுக்குள்ளே எல்லாம் புரட்சி எடுபடாது என்று அவருக்கும் தெரிந்திருக்கும் நமது பண்பாடு என்னாகிறது . ஒருவேளை இன்னும் பல வெளிநாட்டுப் படங்கள் பார்க்க வேண்டி இருக்கும் இரண்டாவது புரட்சியை கொண்டு வர  . 

நல்லா இருக்கியா என்று கடைசியில் பலூன்களுடன் வந்து ஸ்னிக்தாவை தெளிவாகக் கேட்கும்போது அதுவரையிலும் ஒரு மனநிலை தவறியவராய் வந்தது ? படத்தில் வந்த அவருக்கு மனநிலை சரி இல்லையா அல்லது படம் பார்த்த நமக்குதான் சரி இல்லையா ? முதல் காட்சியிலேயே எனக்கு சரியா போச்சு ஊசி மட்டும் போட்டுட்டே இருக்கான் என்று சொல்லி அதன் தொடர்ச்சியான காட்சிகளில் இடுப்பில் நிற்கும்  அளவிற்க்குக்  கூட அந்த உடையை போட முடியாதவராய் காட்டி நடுவில் சிலச்  சில இடங்களில் தேர்ந்த புத்தியும் உணர்ச்சியும் உள்ளவராய் காட்டி முடியல . ஏன் இந்த குழப்பம் என்றே தெரியவில்லை  இதற்க்கு கண்ணுக்குள் நிலவு தேவலாம் .

இளையராஜாவின் இசையைப் பற்றி நான் பேசவில்லை என்றால் எனக்கு விமோட்சனம் கிடைக்காது . நம்மவர்கள் புகழ்ந்து தள்ளும் அளவிற்கா இதில் இசை இருக்கு கொஞ்சம் நெஞ்சை தொட்டு சொல்லுங்க மக்களே . ஒரே மாதிரியான இசை பல இடங்களில் வந்து முதலில் கேட்கும்போது  இருந்த  ரசனை மீண்டு மீண்டும் கேட்கையில் சலிப்புதான் வந்தது . இதை விடவும் சிறப்பாக இளையராஜா இசையில் பின்னி இருக்கிறார் . மசாலா சினிமாவில் இருந்து இது வேறு பட்ட படம் என்பதாலேயே எல்லோரும் தூக்கி வைத்து பேசினார்களோ என்றுதான் தோணுகிறது . அதுவும் படம் முழுக்கவே ஒரே சோக கீதம் அம்மாவைத் தேடிப் போகும் சிறுவனின் பயணம் சோகமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன ? கதை போகப் போக பாதியில் அந்த சோகத்தை கொண்டு வந்திருக்கலாமே . ஆரம்ப காட்சிகளிலேயே இது ஒரு சோக படம் என்பதை இசை சொல்லாமல் சொல்கிறது .

இத்தனை மைனஸ் தாண்டியும் படம் எனக்கு பிடித்திருந்ததுதான் இல்லையென்று சொல்லவில்லை தழுவலோ டவலோ கண்டிப்பாய் இது ஒரு நல்ல முயற்சி .  
Posted by மதார் at 6:14 PM
Labels: சினிமா, நந்தலாலா, மிஸ்கின்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ▼  December (11)
      • அது ஒரு மீன் காலம்
      • நான் இன்ன ஜாதி நீ என்ன ஜாதி
      • மண்ணும் உறவும் நகர்ப்புறமும்
      • தோசையம்மா தோசை
      • அம்மா கை வைத்தியம்
      • பேச்சிலர் குட்டி குட்டி சமையல்
      • அரசுத்துறையின் அவலங்கள்
      • பளபளக்கும் அசன்டாஸ் பரிதவிக்கும் தரமணி
      • விவசாயம் அது ஒரு சுவாரசியம்
      • நவீன லாட்டரி சீட்டு கொள்ளை
      • நந்தலாலா - இன்னும் செதுக்கிருக்கலாம்
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio