skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, December 14, 2010

அம்மா கை வைத்தியம்

பன்னிரெண்டாம் வகுப்பு வரை வீட்டில் இருந்த நாள் வரை எந்த வியாதியும் வந்ததில்லை . எப்போ வீட்டை விட்டு ஹாஸ்டல் போனேனோ அன்றில் இருந்து ஊசியும் மாத்திரைகளும் பழகிப் போய் விட்டன . வீட்டில் இருந்த நாட்களில் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவமனை சென்றாலே பெரிய விஷயம் . அந்த அளவு ஆரோக்கியமாய் வாழ வழி வகுத்தவை கிராமமும் இயற்கை காய் கறிகளும் கூடவே அம்மாவின் கை மருத்துவமும் . கூட இருந்து பார்த்தவற்றில் சில மட்டும் எனக்கு நியாபகம் இருக்கு அவையும் இல்லையென்றால் என் பாடு ரொம்பவே கஷ்டம் .

1 . சளித்தொல்லை
குளிர் காலம் வந்துவிட்டாலே எல்லோரையும் போட்டு படுத்தி எடுப்பது இந்த சளி .

* பெருதும்பை என்று கிராமங்களில் மலையோர இடங்களில் கிடைக்கும் . துளசி மாதிரியான செடி முழு பச்சை இல்லாமல் கொஞ்சம் சாம்பல் கலந்த நிறத்தில் இருக்கும் . செடி 3 -4 உயரம் வரை வளரும் அதில் பூக்களும் உண்டு . அதன் இலைகளைப் பறித்து சாம்பார் வெங்காயம் தோல் நீக்கியது ஒரு கை அளவு எடுத்து தும்பை இலையும் சேர்த்து , வேப்ப மரத்து பட்டை , வெற்றிலைக் காம்பு எல்லாம் சேர்த்து உரல் இருந்தால் அதில் போட்டு நல்லா மசித்து  எடுக்கணும் . கொஞ்சம் தண்ணீர் விட்டு நல்லா சாறு வரும்வரை மசிக்க  வேண்டும் . சாறை வடிகட்டி தொடர்ந்து இரண்டு நாட்கள் குடிக்க சளி போன இடம் தெரியாது .

* சின்ன வெங்காயம் சென்னை மொழியில் சாம்பார் வெங்காயம் ஒரு கை அளவு தோல் நீக்கி எடுத்து இரவு தூங்கப்  போகும் முன் கொஞ்சம் உப்பு சேர்த்து கண்ணை மூடிக் கொண்டு சவைத்து முழுங்கி விட வேண்டும் . கண்ல இருந்து கண்ணீர் வரும் மூக்கில் வெங்காய நெடி ஏறும் அதையெல்லாம் பார்த்தால் நெஞ்சு வலிக்க வலிக்க இருமிக் கொண்டே இருக்க வேண்டும் .

* பச்சை வெங்காயம் சாப்பிட முடியாதோர் வெங்காயத்தை கொஞ்சம் சிறிய அளவில் நறுக்கி கொண்டு நெய்யில் உப்பு போட்டு வறுத்து  ரொம்ப அல்ல வதங்கிய நிலையில் சாப்பிடலாம் . பச்சையாய் சாப்பிடுவதே உடம்புக்கு நல்லது .

*********************************************
மூக்கில் இருந்து தொடர்ந்து நீர் (Running Nose )  வந்துகொண்டே இருந்தால்

* இரவு உறங்கப் போகும் முன் இளம்  சூட்டில் பால் எடுத்து அதில் மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் கொஞ்சம் சர்க்கரை கலந்து இரவு , காலை என தொடர்ந்து இரண்டு நாட்கள் குடித்து வர சரி ஆகும் . இதில் தொண்டை சளியும் குறைந்து நன்று பேசவும் முடியும் .

* நிறைய நல்மிளகு காயம் போட்டு ரசம் வைத்தும் சாப்பிடலாம் .
*********************************************
2 .வாயு மற்றும் புளிப்பு  தொல்லை .
பெரியவர்களுக்கே இதன் பாதிப்பு அதிகம் இருக்கும் என்றாலும் இன்றைய உணவு பழக்க வழக்கத்தினால் இளைய சமுதாயத்தினரையும் இது ஒரு கை பார்கத்தான் செய்கிறது .
சில வேளைகளில் சாப்பாடைப் பார்த்தாலே ஏதோ எதிரியைப் பார்ப்பது போல் அதன் மேல் ஒரு வெறுப்பு வரும் .அதையும் தாண்டி சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிடவும் முடியாது சில நேரங்களில் சாப்பிட்டவுடன் வாந்தி வரலாம் .இதற்க்கு ஒரே வழி இஞ்சிதான் .

* இஞ்சி அதிகம் சேர்த்தால் வாந்தி போய் பேதி வந்துவிடும் அதனால் அளவோடு சாப்பிட்டால் நல்லது.ஒரு ஆள் என்றால் நடுவிரல் நீளத்துக்கு ஒரு துண்டு இஞ்சி போதும் . இஞ்சி , காயம் , நான்கு பூண்டு பல் சேர்த்து மிச்சியில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நல்லா அடிச்சு வடிகட்டி குடித்தாலே போதும் . காலையில் வயிற்றுப் பிரச்னை அவ்ளோதான் இதில் வாய்வும் நீங்கும் .

**********************************************************************************************

வெறும் வாய்வு மட்டும் இருந்து கொண்டு நெஞ்சின் கீழ் அல்லது இடுப்பின் ஒரு ஓரத்தில் பிடித்துக் கொண்டு இருந்தால்

*ஒரு சின்ன முழு பூண்டு எடுத்து தீயில் நன்கு வாட்டி அதன் தோள்கள் கருகும் நிலையில் நல்ல ஒரு வாசனை வரும் .சூட்டில் வெந்த நிலையில் இருக்கும் பூண்டு தோல் நீக்கி  சாப்பிட இடுப்பு பிடிப்பு சரியாகும் .

*இரவில் அவித்த முட்டை ஓடு கழற்றி அதை சுற்றிலும் ஓட்டை போட்டு உப்பில் மூழ்க வைக்க வேண்டும் .காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த முட்டையை எடுத்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் போதும் வாய்வு தொல்லை நீங்கும் .

*********************************************

கிராமங்கள் அல்லது பச்சை பசேல் என்றிருக்கும் மலைப் பகுதிகளுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் சிறியாநங்கை ,பெரியாநங்கை என்று இரண்டு செடிகள் கிடைக்கும் . கிடைத்தால் வாங்கி  வருவது நல்லது , நகர்ப் புறங்களில் தொட்டிகளில் வைத்து கூட வளர்க்கலாம் . உயரம் குறைவாக வளரக் கூடியதே . நல்ல ஒரு விஷமுறிவு மருந்து . துளசி இலை மாதிரிதான் இருக்கும் தினம் இரண்டு இலைகள் கூட சும்மா உண்டு வரலாம் என்ன தின்ன முடியாத அளவில் வேப்பிலையை விடவும் கசக்கும் . பாம்பு ,தேள் அல்லது ஏதேனும் விஷ பூச்சி கடித்தால் முதலில் இந்த இலையைத்தான் தேடுவர் . உடனே சாப்பிட விஷம் முறிந்து விடும் அல்லது நிறைய மிளகு எடுத்து வாயில் போட்டு காரம் தெரியும் வரை சாப்பிட விஷம் முறியும் .
**********************************************
வயிற்றுப் புண் இருந்து உறுதியாகும் பட்சத்தில் பூண்டு கலி செய்து தொடர்ந்து சாப்பிட வேண்டும் .

பூண்டு தோல் நீக்கி நூறு கிராம் அளவில் எடுத்து அதை தனி இஞ்சி சாறுடன் முதலில் வேக வைக்க வேண்டும் . பாத்திரம் அடி பிடிக்காமல் பாத்துக் கொள்க . பூண்டு நன்று வெந்தவுடன் பருப்பு மத்து போட்டு மசிக்கலாம் அல்லது மிச்சியிலும் போட்டு மசிக்கலாம் . துவையல் மாதிரி வந்தவுடன் வாணலியில் நிறைய நல்லெண்ணெய் இட்டு மசித்தவற்றையும்  போட்டு பூண்டின்  அளவுக்கேற்ப கருப்பட்டி அல்லது வெல்லம் தூள் செய்து சேர்த்து  மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கணும் . பத்து நிமிடத்தில் அல்வா போன்று வரும் இறக்கி விடலாம் . இளஞ்சூட்டில் சாப்பிடலாம் சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்கத் தோன்றும் உடனே குடிக்கக் கூடாது . ஏனென்று எனக்கும் தெரியவில்லை அம்மா தண்ணீர் தர மாட்டாங்க . கொஞ்ச நேரம் கழிச்சு குடிக்கலாம் . காது நீர் புகா பாத்திரத்தில் போட்டு மூடி வைக்க ஒரு வாரம் வரை கேட்டுப் போகாமல் இருக்கும் . தொடர்ந்து காலை  , இரவு என ஒரு வாரம் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும் வாய்வும் நீங்கும் .
Posted by மதார் at 4:27 PM
Labels: கிராமத்து மருத்துவம்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ▼  December (11)
      • அது ஒரு மீன் காலம்
      • நான் இன்ன ஜாதி நீ என்ன ஜாதி
      • மண்ணும் உறவும் நகர்ப்புறமும்
      • தோசையம்மா தோசை
      • அம்மா கை வைத்தியம்
      • பேச்சிலர் குட்டி குட்டி சமையல்
      • அரசுத்துறையின் அவலங்கள்
      • பளபளக்கும் அசன்டாஸ் பரிதவிக்கும் தரமணி
      • விவசாயம் அது ஒரு சுவாரசியம்
      • நவீன லாட்டரி சீட்டு கொள்ளை
      • நந்தலாலா - இன்னும் செதுக்கிருக்கலாம்
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • நட்பு - எதுவும் முடியும்-1
    "குட்டிமா நான் MBA ஜாயின் பண்ணிட்டேன் " "என்னப்பா சொல்ற ? ஏற்கனவே மண்ணு (SOIL MECHANICS) மாஸ்டர் படிக்கிறே , சைடு ல வேலை வேற ...
  • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
    அம்பானி இந்தியாவை சுருட்டிவிட்டார்  அண்ணாச்சி தமிழ் நாட்டை சுருட்டிவிட்டார் .இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பற்றிய நமது கவலை , கோபம் எவ்வளவு ...
  • தெரிந்தோர் கூறவும் -மூளைக்கு வேலை
     மறுபடியும் கொஞ்சம் மூளைக்கு வேலை . 1 ."ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் " இந்த பழமொழி தெரியாதோர் எவரும் இர...
  • யாளி
    எந்தவித திட்டமிடலும் இல்லாமல் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற எனக்கு பார்வையில் பட்ட புத்தகம் யாளி அட்டை படத்தால் கவரப்பட்டு வாங்கினேன் . படிக...
  • திருந்தவே மாட்டீங்களா ?
                                    இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவுலகம் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன் . நித்யா பத்தின பதிவுகளையே படிக்க கூடாதுன...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • முகம் தெரியா வில்லன்கள்
    வாழ்க்கையில் எத்தனையோ வில்லத்தனம் மத்தவங்க பண்ணி பார்த்திருப்போம் ஏன் சில நேரங்களில் நாம் கூட சில சில்லறை வில்லத்தனம் செய்திருப்போம் . ஆனால்...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio