skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Friday, November 12, 2010

அவள் அவளாய் உன்னவளாய்


"கத்தரிக்காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி இப்பவே வந்துட்டா "

இவை அவள் அம்மாவின் திருவாய் மொழிகள் ...........

பதிமூன்று வயதில் ஒரு நான்கரை அடி உயரத்தில் 30 கிலோ எடையுடன் கூடிய அவள் பெரிய மனுசியானபோது அதைக் கொண்டாடியதை விட கேலி பேசியதுதான் அதிகம் . எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்க அவளுக்கோ தேர்வு மேலேயே எண்ணம் முழுக்க இருந்தது . வகுப்பிலும் முதல் மாணவி என்பதால் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்பதிலேயே அவளின் கவலை முழுவதும் குடிகொண்டிருந்தது .  சகோதரன் பள்ளியில் போய் இதுவிசயமாய் கேட்க தலைமையாசிரியரும் தேர்வு கண்டிப்பாய் எழுத வேண்டும் என்று சொல்ல அவளுக்கு கேட்ட மாத்திரத்திலேயே பறப்பது போல் இருந்தது .அதுவரையிலும் கேட்ட கேலி பேச்சுக்கள் கூட அதில் காணாமல் போய்விட்டன . பெரிய மனுசியான பெண்ணுக்கு இரவில் தலைக்கு தண்ணீர் ஊற்றி புடவை உடுத்துவது வழக்கம் . அவளுக்கு எல்லாமே தலைகீழாய் நடந்தது . காலையில் தலைக்கு  ஊற்றி புது சுடிதார் போட்டு உட்க்கார வைத்து சிறிது நேரத்திலேயே எக்ஸாம் எழுத பள்ளிக்கு அனுப்பப் பட்டாள்  . ஒவ்வொரு பெண்ணின் உடலும் புடவை பார்ப்பது அவள் பெரிய மனுசியாய் ஆகும்போதே இவள் உடம்பு மட்டும் முதன்முதலில் புடவை சுற்றியது கல்லூரி பெண்கள் தின விழாவன்றே . இவளுக்கு எல்லாமே மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாய் நடப்பதுவே வாடிக்கையாய் போய்விட்டது .

பட்டாம் பூச்சியாய் சுற்றித் திரிந்த அவளை அந்தப் பதிமூன்று வயதில் அறையின்  ஒரு ஓரத்தில் இருக்க வைத்திருந்த அந்நாளில் வந்து எட்டி பார்த்த சின்ன அண்ணனை பார்த்து அவள் முகத்தில் வந்த வெட்கம் அதுதான் அவளின் கடைசி வெட்கமாகக் கூட இருந்திருக்கும் .அன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் அதைத் தொடாதே இதைத் தொடாதே அங்கே உட்காராதே என்று செய்யக் கூடாத தொடக் கூடாத பட்டியல் நீளுமேத்  தவிர எதைத் தொட வேண்டும் எதைச் செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லப் பட மாட்டாது . அதைக் கேட்கும்போதெல்லாம்  ஏன் பெண்ணாய்ப் பிறந்தோமென்று அவளுக்குள்ளே வரும் கேள்விகள் .தனி தட்டு , தனி டம்ளர் , பாய் என்று எல்லாமே இவளுடன் சேர்ந்து மாதம் மூன்று நாட்கள் வெளிநடப்பு செய்ய வேண்டி வரும் . அதிலும் சில பண்டிகைக் காலமானால்  கேட்கவே வேண்டாம் "ஒரு நல்ல நாள் கிடையாது சரியா சாமி கும்பிட முடியுதா " .கேட்ட மாத்திரத்தில் அப்படியே தன்னுள் குறுகிப் போவாள் .

"பாதையோரத்து வயலும் வீடும் ஆகாது "

வயல் என்றால்
விளையும் பயிர் எல்லாம்
போய்வரும் பாதசாரிகள் வாயில்
வீடென்றால் நம் வீட்டு பிரச்னை
எல்லாம்  நடப்போர் காதில் .


வெகு சில மாதங்களில் இதற்கு பழகிப் போன அவள் அடுத்து எந்தப் பண்டிகை வந்தாலும் அதை நினைத்து சந்தோசம் கொள்வதை விட நாள்கணக்கு எண்ணுவதிலேயே நாட்கள் போகும் . சரியாய் பண்டிகை சமயமென்றால் பண்டிகை நாள் நெருங்க நெருங்க திக் திக் கதைதான் . அவளால் அவள் வீட்டு பூஜை தடைபடுவதை அவள் விரும்பவில்லை . சுற்றம் உள்ள இவள் வயதொத்த பெண்களின் அறிவுரை "சாமியை மனசுல நினைச்சுட்டு கை  அல்லது காலின் பெருவிரலில் மஞ்சள் தேய்த்து ஒரு வெள்ளை நூலைக் கட்டு நீ அதைக் கழற்றும் வரையில் நிம்மதியாய் இருக்கலாம் ". அடுத்து வந்த பண்டிகைக் காலங்கள் வெள்ளை நூலினால் காப்பற்றப் பட்டன . கால மாற்றத்தில் எல்லாவற்றிக்கும் பழகியும் போனாள் .

உங்களுக்கும் தெரியாமல் இவளைப் போல் பல அவள்கள் உங்கள் வீட்டிலும் இருக்கலாம் .அன்னையாய் , மனைவியாய் , காதலியாய் . தோழியாய் , சகோதரியாய் , உங்களை ஒரு நிமிடம் கடந்து போகும் ஒவ்வொரு பெண்ணிலும் இவளைப் போல் ஒரு அவள் ஒளிந்து கொண்டிருக்கலாம் . ஏதோ ஒரு உறவின் மூலமே அவளின் உடல்ரீதியான பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் நீங்கள் அப்படி ஒரு உறவே இல்லாத போதும் அதைப் புரிந்து கொண்டு வழிவிடலாமே. முடியா சமயத்தில் அடுப்புக்கு விடுப்பு கொடுத்து மனைவிக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் உடன் பணியாற்றும் அவளுக்கும் அவள் முகம் காண்பிக்கும்  சோர்வு பார்த்து கொஞ்சம் விடுப்பு தரலாமே  .
Posted by மதார் at 11:05 PM
Labels: அனுபவம், கிராமம், பெண், வலி
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ▼  November (7)
      • மலை மாலை பக்தி உல்லாசப்பயணம்
      • அழகை ரசிக்கிறது தப்பா ?
      • டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும் - எச்சரி...
      • சமையலோ சமையல் - வாழைப்பூ செய்முறை படங்களுடன்
      • நட்பு - எதுவும் முடியும்-2
      • நட்பு - எதுவும் முடியும்-1
      • அவள் அவளாய் உன்னவளாய்
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio