டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு நேற்று இரவு எட்டு மணியளவில் இடிந்து விழுந்து 66 உயிரழப்பு . இன்றைய பத்திரிகைகளின் தலைப்பு செய்தி . வழக்கம்போல் கட்டிடம் கட்டிய பில்டர் மேல் தப்பு சொல்லியாச்சு எப்போதும் நடக்கிறதுதானே . முதலில் ஐந்து மாடி அளவில் மட்டுமே கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது . தற்பொழுது அதன் மேல் இன்னொரு தளம் கட்டப்படுகிறதாம் நல்ல விஷயம் . அடுத்து கட்டிடம் இருப்பது யமுனை நதிக்கரையின் ஓரம் . இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த கனமழையினால் யமுனையில் வெள்ளம் அதனால் கட்டிடம் இடிந்து விழுந்து விட்டது . இன்னமும் எத்தனைக் காரணங்கள் வரும் என்று தெரியவில்லை . மிக முக்கியமாய் சொல்லப் படும் காரணம் water logging . water logging என்றால் ஒரு இடத்தில் தண்ணீர் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தோமானால் அது ஒரு அளவு வரையியே உள்ளே பூமிக்குள் போகும் . கீழுள்ள மண் எல்லாம் ஈரமான பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் மேற்கொண்டு உள்ளே இறங்காது . ஈர மண்ணும் சேறு போல் மாறிவிடும் அதன் கடினத்தன்மையும் குறைந்து வலுவிழந்து விடும் .
யமுனை ஆறு பல வருடங்களாய் அங்கேதான் ஓடிக் கொண்டிருக்கிறது வருடா வருடம் வெள்ளமும்வந்து கொண்டுதான் உள்ளது . என்னமோ இரண்டு மாதத்திற்கு முன்புதான் யமுனை வந்ததாகவும் வெள்ளம் வந்ததாகவும் water logging ஆகி கட்டம் இடிந்து விட்டது . கட்டிடத்துக்கான அடித்தளம் முதலில் அங்கு எடுக்கப்படும் மண் சாம்பிள் பரிசோதிக்கப்பட்டு அதன் தாங்கும் சக்தி எல்லாம் கணக்கிடப்பட்டே கட்டிடத்துக்கான உயரத்துக்கு ஏற்ப அடித்தளம் அமைக்கப்படும் . இந்த மாதிரியான water body அருகில் கட்டப்படும் கட்டிடங்கள் பெரும்பாலும் pile foundation முறையிலேயே கட்டப்படும் . இடிந்த கட்டிடத்துக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தின் Basement இல் இருக்கும் தண்ணீர் இதன் ஆயுளும் எவ்வளவு என்று தெரியவில்லை பார்க்க வீடியோ . இதேபோல்தான் தண்ணீர் இதன் அடியிலும் இருந்திருக்கும் அப்பொழுது யாருமே கவலைப்படாமல் எல்லாம் முடிந்த பின் ஆமாம் இங்கேயும் தண்ணீர் நின்றது ......... என்று வரும் statements .இதன் மேல் இன்னொரு தளம் கட்ட நடந்த ஏற்பாடுகள் இது ஒன்றும் விபத்திற்கு பெரிதாய் காரணமாய் இருக்காது . எப்பொழுதுமே FUTURE EXTENSION என்று கருத்தில் கொண்டே அடித்தளம் வடிமைக்கப்படும் (டிசைன்) ஒரு தளம் அப்படி ஒன்றும் பெரிதாய் பாதிப்பு ஏற்படுத்தாது .விபத்திற்கு முழுக்க முழுக்க தண்ணீர் மட்டுமே காரணமாய் இருக்க முடியும் . தேடிய வரையில் இக்கட்டிடம் எந்த ஆண்டு எந்த வகையில் கட்டப் பட்டது என்று தெரியவில்லை . பதினைந்து ஆண்டுகள் முன்னம் மட்டுமே கட்டிருந்தால் pile foundation முறையில் கட்டி இருந்தால் இந்த விபத்து இவ்வளவு கோரமாய் நடக்க வாய்ப்புகள் குறைவு . டெல்லி முடிஞ்சி போச்சு அருகிலேயே UPCOMING இடத்திலும் நிறைய கட்டிடங்கள் உள்ளன . அதற்க்கு ஏதாவது வழிமுறை தேர்வு செய்தால் நன்று . முடிந்தால் மண்ணின் தரத்தை பலப்படுத்தலாம் . sand foundation முறைகள் இருக்கின்றன .
நமது சென்னையிலும் ஏனைய இடங்களிலும் இடம் குறைந்த விலைக்கு கிடைத்து விட்டது என்று வீடு கட்டி வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை . ஏற்கனவே பல ஆண்டுகளாய் இருந்த நீர்பிடிப்பு தளங்கள் என்றுமே ஆபத்தானவை . மழைக்காலங்களில் வாட்டம் பார்த்து தண்ணீர் அங்கேதான் வந்து தேங்கும் . நான் பார்த்த வரையில் வேளச்சேரி , பெருங்குடி ரெயில் நிலையங்களை சுற்றியுள்ள வீடுகள் குளத்தினுள் கட்டப் பட்டுள்ளன . அந்த கட்டங்களின் ஆயுளும் வெகுக் குறைவே . இப்பொழுது அடுக்கு மாடி குடியிருப்புகளும் அங்கே கட்டப்படுகின்றன .
அதற்க்கு அடுத்தாற்போல் இருக்கும் காலியிடங்களில் விரைவில் அரசு அல்லது தனியார் துறைக் கட்டிடங்கள் பல அடுக்குகளைக் கொண்டு கட்டப்படலாம் . அப்பொழுது நடக்கும் அதிர்வுகள் மூலம் (ரமணா படத்தின் காட்சிதான் அது கற்பனைக் காட்சி அல்ல ) இப்பொழுது கட்டப் பட்டிருக்கும் குட்டிக் குட்டி கட்டிடங்கள் நிலைமை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை . அப்பொழுது வந்து இதற்க்கு CMDA அப்ரூவல் எப்படி கிடைத்தது இங்கு குளம் இருந்தது தெரியாதா? தண்ணீர் கனெக்சன் , கரண்ட் கனெக்சன் குடுத்தது எப்படி தோண்டு ஊழல் எங்கெல்லாம் நடந்துள்ளது என்று காமன் வெல்த் , ஆதர்ஷ் வீடு மாதிரி சில நாட்கள் பத்திரிகைகளில் வந்து தலைப்பு செய்தியாய் அலங்கரிக்கலாம் . நமக்கும் செய்தி படித்து பொழுது போகும் . வழக்கம்போல் அரசை குறைகூறியே நமக்கு காலம் போகும் .
