skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Sunday, May 30, 2010

என்னுடைய கோவம் நியாயமானதா ?

வேலையை விட்டு  சொந்த ஊர்  போனது எவ்வளவு சுகமா சாப்பிட்டு நிம்மதியா  உறங்கி எழ முடிஞ்சது . இந்த சென்னை காத்து இல்லாமல் மனசு ரொம்ப அமைதியா இருந்தது , கோவம் எல்லாம் சுத்தமா மனசுல உணரப் படவே இல்லை . உண்மையில் நாம் கோவப்படுவது நமக்கும் நம்மைச் சுற்றி நடப்பவைகளையும் கண்கள் பார்த்து ஆள் மனதில் படிந்து ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அது நம் கட்டுப்பாடையும் மீறி வெளி வருது . என்னுடைய அதிகப் படியான கோவம் கூட குறைந்து அண்ணா பையனுடன் ரொம்ப நேரம் சுட்டி டிவி பார்த்து மனசு விட்டு சிரிக்க முடிஞ்சது .சென்னை வந்து ஒரு வாரத்தில் மீண்டும் வேலை கிடைத்ததும் அந்த பரபரப்பான சூழலில் மீண்டும் மாட்டிக்கொண்டதும் மறுபடியும் எனக்குள் இருக்கும் கோவம் அடி மனதில் சேர ஆரம்பித்தது . 

நேற்று வழக்கம் போல் 7 மணிக்கு வைத்திருந்த அலாரம் எனக்கே தெரியாம அணைத்து வைத்து ஏதோ ஒரு உள்ளுணர்வில் கண்முழிக்க மணி 7 .50 . வேளையில் சேர்ந்த மூன்று நாட்களுமே பத்து நிமிட தாமதம் . இன்றும் லேட் ஆக போகுதே என்று அரக்க பறக்க கிளம்பி(நல்ல வேலை ஆபீஸ் மெஸ் புண்ணியத்தில் காலைச் சமையலில் இருந்து விடுதலை ) பத்து நிமிட நடைக்கு பின் பேருந்து நிறுத்தம் மற்ற நாள் விட அரை மணி நேரம் முன்னதாகவே போய்ச் சேர்ந்தேன் , பஸ் மட்டும் வரல . அது என்னவோ நாம லேட்டா போனா உடனே பஸ் வரும் . சீக்கிரம் போனா பஸ் லேட்டா வரும் . ஒரு வழியா பஸ் வந்து சேர்ந்தது . சென்னையின் ஹய்டெக் இடி என்றால் அது டீலக்ஸ் பஸ் இடிதான் . வேகமா போகுமே என்று அதிக விலை கொடுத்து அதிக இடி வாங்குவதும் இங்கதான் .


பஸ் உள்ளே லேடீஸ் சீட்ல இரண்டு ஆண்கள் இருக்க , நானும் டிக்கெட் வாங்கி சரி வழக்கம் போல இன்னைக்கும் நிக்க வேண்டிதான் என்று மனசுக்குள் நினைக்க , என்னருகில் உக்கார்ந்து இருந்த IT பெண் லேடீஸ் சீட் அவங்களை எழுந்திருக்க சொல்லுங்க என்று என்னிடம் சொல்ல , நாம என்னங்க சொல்றது அவங்களே எழுந்தா நல்லா இருக்கும் இல்ல நடத்துனர் சொல்லணும் என்று சொல்லி நிற்க அடுத்த நிறுத்தத்தில் ஒருவர் இறங்கிட்டார் . சரி இப்போவாவது உக்காரலாம் என்று நினைத்து முடிப்பதற்குள் இன்னொரு ஆண்மகன் உக்கார அந்த பெண் என்னை பார்க்க இரண்டு பேருக்குமே சிரிப்பு வந்திருச்சு . இதுல  என்ன ஒரு விஷயம் என்றால் பெண்கள் பகுதியில் நான் மட்டும்தான் நின்னுட்டு வரேன் எங்க அவங்க என்னைப் பார்த்தா நான் எழுந்திருக்க சொல்வேனோ என்று இருவருமே ஜன்னல் வெளியவே பார்வையை வச்சுருக்காங்க .
அடுத்த நிறுத்தம் ஒரு பெண் ஏறி என் பக்கத்தில் வந்து நின்று கொண்டே லேடீஸ் சீட்டில் இருக்கும் ஆண்களையும் அவர்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் என்னையும் பார்த்து அவரும் என்னை பார்த்து சிரிக்க சரி நிக்குறதுக்கு துணைக்கு ஒரு ஆள் என்று நினைச்சுகிட்டேன். அதற்குமேலும் பொறுமை தாங்கமுடியாமல் அந்த IT பெண் திரும்பி இது லேடீஸ் சீட் எழுந்திருங்க என்று சொல்ல ஸ்டார்ட் மியூசிக் . இரண்டு பேரும் அப்படி பேசுறாங்க "அதைச் சொல்ல நீ யாரு , எங்களை எழுந்திருக்க சொல்லி இவங்க சொல்லட்டும் நாங்க எழும்புறோம் உன் வேலை எதுவோ அதைப் பாரு " என்று அந்த பெண்ணைத் திட்ட அந்த பெண்ணும் என்னருகில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் "உங்களுக்காகத்தானே பேசுறேன் நீங்க பேச மாட்டீங்களா" என்று சொல்ல இதுக்கு மேலையும் நாம பேசாம இருந்தா நமக்காக பேசின அந்த பொண்ணு என்ன நினைக்கும் என்று நானும் கலத்தில் இறங்கிட்டேன் . அநேகமாய் நானும் , அந்த IT பெண்ணும் சம வயதாய் இருப்போம் . என்னருகில் நின்று கொண்டிருந்தவர் திருமணமானவர் , நான் எழுந்திருக்க சொல்ல சங்கடமாய் உணர்வேன் என்று அவராவது எழுந்திருக்க சொல்வார் என்று அந்த பெண் நினைத்து அவரிடம் சொல்ல அந்த பொண்ணும் சிரிக்க மட்டும் செய்யுது .

இரண்டு ஆண்களும் ரொம்ப நல்லவங்க மாதிரி IT பொண்ண திட்டுறாங்க . நானும் "சார் ரொம்ப பேசாதீங்க , நீங்க எங்க எழுந்திருக்க சொல்வோமொன்னு வெளியவே பார்த்துட்டு வந்தீங்க நீங்க எங்களை பார்க்காமல் நாங்க எப்படி சொல்ல முடியும் உங்களை தொட்டு கூப்பிட்டு  எழுந்திருக்க சொல்லனுமா " என்றேன் . படித்தவர்  அலுவலகத்தில் பணி புரிபவர் சொல்றார் "எவளோ (ஐ .டி .பொண்ணு )இவங்களுக்காக பேசுவாளாம் உடனே இவங்களும் (நாங்க )பேசுவாங்கலாம் " என்று சொல்ல சரி கோவம் வந்திடுச்சு . ஹலோ சும்மா அவ இவன்லாம் மரியாதை இல்லாம பேசாதீங்க , நாங்க சொல்லித்தான் நீங்க எழுந்திருக்கணும் என்று இல்ல , லேடீஸ் நிக்குறோம் அதைப் பார்த்து நீங்களே எழுந்திருந்தா  அது நல்ல மனுஷத்தனம் அதை விட்டுட்டு அதிகம் பேசாதீங்க என்று நானும் பதிலுக்கு கத்திட்டேன் . எனக்குள்ள அவ்ளோ டென்சன் அடுத்து ஒரு ட்ரெயின் வேற பிடிச்சு போகணும் , அதன் பிறகும் லேட் ஆனா ஒரு ஆட்டோ அதுக்கு ஒரு இருபது தெண்டம் அழணும் இந்த டென்சன்ல மனுஷிக்கு அவங்களை எழுந்திருக்க சொல்லி உக்கார தோணல.(இதுவரைக்கும் நான் பெண்கள் சீட் பக்கம் உக்கார்ந்திருக்கும் ஆண்களை எழுப்பியதில்லை . அவங்களாவே எழுந்தா மட்டும் உக்காருவேன் இல்லைனா பேசாம நின்னுட்டே போய்டுவேன் . சில பெண்கள் ஏறியதும் இது லேடீஸ் சீட் என்று அவங்க சொத்து மாதிரி அதிகாரம் பண்ணும்போது அந்த பெண்கள் மேல்தான் கோவம் வரும் , ஒருமுறை புழுக்கம் தாங்காமல் ஜன்னலோரம் இருக்க விரும்பி லேடீஸ் சைடு நிரம்பிருக்கவே ஆண்கள் பக்கம் உக்கார ஒரு ஆண்மகன் வந்து இது ஆண்கள் சைடு நீங்க லாஸ்ட் சீட் போங்க என்று எனை எழுப்பிவிட்டு அவர் மட்டும் அவர் பெண் மனைவியுடன் அங்கு உக்கார எனக்கு சிரிப்புதான் வந்தது  ).

என்னருகில் நின்றுகொண்டிருந்த பெண்ணுக்கு அப்போதான் ரோசம் வருது "சரிங்க இப்போ நாங்க சொல்றோம் எழுந்திருங்க " என்று சொல்ல அதன் பிறகுதான் எழுந்திருக்காங்க . அப்படியும் அவர் பேசிட்டே இருக்கார் . நாங்களும் பதிலுக்கு பேச ஒரு கட்டத்தில் எங்களுக்கும் பேச தெரியும் பேசாம போங்க என்று சொல்றேன் அவரும் அப்படியா வா பேசி பாக்கலாம் என்று வம்பிழுக்க , என்னங்க ஏதோ போட்டு பார்ப்போம் வா என்று சொல்ற மாதிரி சொல்றீங்க எழுந்துடீங்க இதுக்கு மேல அதிகமா பேசிட்டு இருக்காதீங்க என்று நான் முற்றுப்புள்ளி வச்சுட்டேன் . அந்த ஆள் பேசிட்டே இருக்கார். இதுக்கு மேலையும் பேசக் கூடாதுன்னு அமைதி ஆய்ட்டேன் . எந்த லூசும் தன்னை லூசுன்னு ஒத்துக்காது அது மாதிரிதான் தப்பு செஞ்சவங்க தான் தன்னை நிரபராதி என்று காட்டிக்கொள்ள வாதிட்டுக்கொண்டே இருப்பாங்க  . அந்த ஆளும் அதைத்தான் செய்தார் . அப்போதான் புரிஞ்சது பெண்கள் லேடீஸ் சீட்டில் இருக்கும் ஆண்களை எழுந்திருக்க சொல்வதில் தப்பே இல்லையென்று. இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு பொது இடத்தில் அவ்வளவு சத்தமா நான் பேசியதே இல்லை , முடிஞ்ச வரைக்கும் அமைதியாய் போய்டுவேன் . ஆனால் எங்களுக்காக பரிந்து பேசிய அப்பெண்ணை அவர் அவமானப் படுத்தி பேசவே அதற்க்கு மேலும் நான் பேசாம இருந்தால் அது அந்த பெண்ணை நான் அசிங்கபடுத்துற  மாதிரி இருந்திருக்கும் .
Posted by மதார் at 2:40 AM
Labels: கோவம், சென்னை, பஸ்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ▼  May (6)
      • என்னுடைய கோவம் நியாயமானதா ?
      • ஒரு பெண்ணின் திருமண எதிர்பார்ப்புகள்
      • மரண பயம் பார்த்ததுண்டா ?
      • ஏப்ரல் பயணம் ஒரு அனுபவம்
      • அல்வா வாங்கி வரும் நெல்லை மக்களே கவனம்
      • ஊர்பிரச்சனை உடனடி தீர்வு வேண்டும்
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio