கேள்வி : உனக்கு பிடிச்சது காதல் திருமணமா ? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமா ?
வர்ஷினி : காதல் திருமணம் முதல் சாய்ஸ் காதலே அமையாத பட்சத்தில் பெற்றோர் விருப்பம் .
கேள்வி : உன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் ?
வர்ஷினி :படிச்சவரா இருக்கணும் , நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை , வாழ்க்கைக்கு தேவையான அளவு வருமானம் இருந்தால் போதும் . அக்கம் பக்கம் பார்த்து அதிகப்படியாய் ஆசைப்படும் பெண்ணல்ல நான் . அதனால பணம் வச்சு பிரச்னை இல்லை . ஆண் ஆணாய் அவருக்குரிய மிடுக்குடன் இருக்கணும் . கூஜா தூக்குற ஆள் மட்டும் வேண்டவே வேண்டாம் . சின்னச் சின்னச் சண்டைகள் வரணும் பிறகு ஒரு சமாதானம் வரணும் , எதற்க்கெடுத்தாலும் ஆமாஞ்சாமி போடக்கூடாது , என்னுடைய உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கணும் . (எங்களுக்குள் "மிதிக்காம இருந்தா சரிதான்" ).கேள்வி :காதல் திருமணம் என்றால் எந்த மாதிரி இருக்கணும் ?
வர்ஷினி :கலப்பு திருமணம் என்றால் சரி . ஆனால் மதம் மாறி மட்டும் திருமணம் பண்ண மாட்டேன் . இத்தனை வருசமாய் ஒரு இந்துவாய் வளர்ந்தவள் நான் . என்னுடைய குழந்தையும் ஒரு இந்துவாதான் வளரனும் . (எங்களுக்குள் "ஏன் கோவிலுக்கு நேர்ந்து விடப் போறாளா ")கேள்வி :சரி உன் வீட்டுக்காரருக்கு சமைச்சு போடுவியா ?
வர்ஷினி :சற்றே கோவத்துடன் , யாரைப் பார்த்து என்ன கேள்வி கேக்குறீங்க நான் நளனுக்கு தங்கட்சியாக்கும் (நாங்க "நளன் இருந்து கேட்ருந்தா இந்நேரம் தூக்குல தொங்கிருப்பார் ) . ஒரு ஒல்லிப்பையனை கல்யாணம் பண்ணி என் சமையல் சாப்பிட்டு குண்டாக்கி காட்டுறேன் பாருங்க . அவங்க வீட்ல எல்லாரும் ஆச்சரியப்படணும் .(எங்களுக்குள் " ஆமாமா அப்புறம் வாசலை கொஞ்சம் அகலப் படுத்தாம இருந்தா சரி ")கேள்வி : சரி உனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று விரும்பினால் அவனிடம் உன் காதலை நீ வெளிப்படுத்துவியா ?
வர்ஷினி : என்னைப் பொறுத்த வரைக்கும் என் மனசுல ஒரு பையன் இடம் பிடிப்பதை விட என்னிடம் பழகும் அந்தப் பையன் மனசுல தோணனும் , இவ நமக்கு ஏற்றவள் , நம்ம குடும்பத்துக்கும் ஏற்றவள் இவளை திருமணம் செய்யலாம் என்று . என் பழக்க வழக்கம் , குணம் , படிப்பு , அழகு என்று பிடித்து என்னிடம் அவன் தன் காதலைச் சொன்னால் எனக்கும் அவனை வேண்டாம் என்று சொல்ல காரணம் இல்லாத பட்சத்தில் வீட்டில் சொல்லி திருமணம் செய்வேன் . பெத்தவங்க சம்மதம் இல்லாம பண்ண மாட்டேன் . கண்டிப்பா அவர்கள் சம்மதிக்க வச்சுடுவேன் , இது வரை என் சம்மந்தப்பட்ட என்னுடைய முடிவு எதுவும் தப்பானது இல்லை , அது என் வீட்டாருக்கும் தெரியும் .(எங்களுக்குள் "இவகிட்ட காதலை சொல்றவன் ரொம்ப பாவம் ")கேள்வி :திருமணதிற்கு பிறகு கணவர் குடும்பம் உன்னுடன் இருந்தால் ஏற்றுக்கொள்வாயா ? (மாமி , மாமா , தங்கை , தம்பி )
வர்ஷினி :நானும் பெரிய குடும்பத்துல பொறந்து வளர்ந்தவதான் . யார் இருக்காங்களோ இல்லியோ மாமியார் கண்டிப்பா என்கூட இருக்கணும் . என் தலை பூ கூட சீக்கிரம் வாடாது அதனால என் மாமியார் ஆயுள் கெட்டியாம் , (எங்களுக்குள்"அப்போ சீக்கிரம் உன் புருசனுக்கு முடி கொட்டிரும் , சண்டை தீர்த்து முடியாதே ") உங்கள மாதிரி ஆட்களை சமாளிச்சு பழக்கம் இருக்குறதால மாமி கூட சண்டை போட மாட்டேன் , நீங்களே எத்தனை மாமிகளுக்கு சமம் .(இது நிஜம் விடுதியில் தங்கிப் படிச்சாலே மத்தவங்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் , ஒருஒரு பெண்ணும் ஒருஒரு மாதிரி இருப்பாங்க , சூடு சொரணை எல்லாம் ரொம்ப கம்மியாதான் இருக்கும் , இது இருந்தாதானே மாமியார் மருமகள் சண்டை வரும் .)
கேள்வி : எங்களுக்கு நீ சொல்ல விரும்புவது ?
வர்ஷினி : உங்க ஆத்துக்காரருக்கு வீட்டு சமையல் போரடிக்காம பார்த்துக்கோங்க , ஹோட்டல் தேடி போக விடாதீங்க அது உங்களுக்குத்தான் கஷ்டம்.ஹோட்டல் சுவை பிடிச்சு போச்சுன்னா அப்புறம் உங்க சமையல் பிடிக்காது (எங்களுக்குள் "ஹோட்டல் போய் சாப்பிட்டா சமைக்குற வேலை மிச்சம் இதுல கஷ்டம் என்ன இருக்கு ")
வர்ஷினி : அடிப்பாவிங்களா நான் சொன்னது சமையல் இல்லை , வீட்டு சமையல் -நீங்க , ஹோட்டல் சமையல் - உங்களுக்கே புரிஞ்சுருக்கும் .
இப்பெண்ணின் எதிர்பார்ப்புகள் சரியா ?
இந்த பேச்சின் நடுவில் என்னிடமும் கேட்க , நானும் எனக்கு ஜோசியர் மாப்பிள்ளை நார்த்திலிருந்து வருவார் என்று சொன்னார் என்று பலமுறை சொல்ல , ஒருமுறை அவர்கள் உனக்கென்ன மாப்பிள்ளை வட இந்தியாலிருந்து வரப் போறார் என்று சொல்ல அப்போதான் எனக்கு எல்லாம் புரிஞ்சது . அது வட இந்தியா இல்லை , என் வீட்டிலிருந்து வட திசையில் மாப்பிள்ளை அமையும் என்று ஜோசியர் சொன்னதாய் பிறகு சொல்ல அவர்களின் (ஒரு பத்துபேர் )ஒட்டுமொத்த பார்வையும் என்மேல் .என் நல்ல நேரம் அன்னைக்கு அடி வாங்காம தப்பிச்சேன் . (வட திசையை நான் ஆங்கிலத்தில் நார்த் என்று சொன்னதால் வந்த குழப்பம் அது )
