skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Tuesday, May 25, 2010

மரண பயம் பார்த்ததுண்டா ?

                   மரண பயம் , சாவின் விளிம்பு வரை சென்று இனி பிழைக்க மாட்டோம் என்று நினைக்கும் பொழுதில் ஒரு நொடியில் மீண்டு நாம் உயிருடன்தான் இருக்கிறோமா என்று நம்ப முடியாமல் தன்னையே புது மனிதனாய் பார்ப்பவர்களின் கண்களில் அவர்கள் உயிர் பிழைத்த சந்தோசத்தையும் தாண்டிய ஒரு அதிர்ச்சி  பிரதிபலிக்குமே அதைப்  பார்க்கும்போது தெரியும் மரணம் எவ்வளவு கொடுமையானது அதுவும் விபத்துகளில் மாட்டி அதிர்ஷ்டவசமாய் தப்பிப்பவர்களின் கண்களில் தெரியும் அந்த  அதிர்ச்சி உச்சகட்டம். ஒரு மூன்று சம்பவங்கள் அதில் நான் பார்த்த அந்த மரண பயம் மனிதன் வாழ எவ்வளவு ஆசைப்படுகிறான் என்று உணர்த்தியது .
நிகழ்வு 1 :
                 கல்லூரி மூன்றாம் வருடம் நாங்கள் மாணவ , மாணவியர்  ஒரு 50 பேர் 3 நாள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றோம் . வரும்வழியில் இருக்கும் Black Thunder   தண்ணில1 நாள் முழுவதும் நல்லா ஆட்டம் போட்டோம் . வாட்டர் கேம்ஸ் நிறைய உண்டு . சிலது நீச்சல் தெரிந்தால் மட்டுமே விளையாட முடியும் . எங்கள் வகுப்பில் பெண்களில் எனக்கும் , ஒரு நான்கு மாணவர்களுக்கும் மட்டுமே நீச்சல் தெரியும் என்பதால் நாங்கள் மட்டுமே அதில் இருக்க என் சக நண்பனுக்கும் அதில் விளையாட ஆசை . அது ஒரு மேட்டிலிருந்து பெரிய குழாய் வடிவில் வரும் சுரங்கப்பாதை அதில் மேட் மூலம் சறுக்கிக்கொண்டு வந்து கீழிருக்கும் நீச்சல் குளத்தில் விழ வேண்டும் . குளம் ஒரு பத்தடி ஆழம் . ஆழ்    தண்ணீரின் குணம் மேலிருந்து  விழும்பொழுது கீழிருந்து ஒரு உந்துவிசை நம்மை தூக்கிவிடும் அதற்குள் நாம் சுதாரித்து நீச்சல் அடித்துவிட வேண்டும் கொஞ்சம் மிஸ் பண்ணாலும் நம் உடம்பின் எடையால் புவி ஈர்ப்பு விசை மூலம் கீழே இழுக்கப்படுவோம் . (கிணத்துல குளிச்சவங்களுக்கு இது தெரியும் ) நண்பனின் நண்பன் , டேய் மச்சான் நான் இருக்கேண்டா தைரியமா வா நீ விழுந்ததும் நான் உன்னை பாத்துக்கிறேன் என்று வாக்குறுதி குடுக்க அவனும் சுரங்கம் வழியா வந்து விழுந்துட்டான் , அவனுக்கும் நீச்சல் தெரியாது . விழுந்தவன் அப்படியே மூழ்க வாக்குறுதி குடுத்த நண்பன் தண்ணிக்குள்ள குதிச்சி தம் கட்டி மூழ்கினவன் காலை பிடிச்சி அவன் தலை தண்ணிக்கு மேல வர வச்சுட்டான் , அவங்க இருக்குற இடம் கரையிலிருந்து ஒரு பத்தடி தூரம் அவனுக்கும் சுத்தமா நீந்த தெரியல மாணவர்கள் யாரும் இதைப்  பார்க்கவும் இல்ல . ஒருத்தனால மட்டும் அவனை கரைக்கு கொண்டுவர முடியாது வேற வழி இல்ல ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு நானே நீந்திப்போய் அவன் கைய பிடிச்சி  கொண்டு வந்து கரையில் விட்டேன் தாமதிக்குற ஒவ்வொரு நொடியும் மூழ்கிருக்குரவனுக்கு ஆபத்து . நீச்சல் தெரியாம ஒருவழியா அவன் கரைக்கு வந்ததும் முழிச்ச முழி , ஏன் இப்படி முழிக்குற உன்ன என்ன சாகையா விட்டுடுவோம் என்றேன் . அவன் பாவம் வாக்குறுதி குடுத்தவனை கெட்ட கெட்ட வார்த்தையில திட்ட ஆரம்பிச்சுட்டான் .
 நிகழ்வு 2 :
                 பிரெண்ட பாக்குறதுக்காக பஸ்ல  பெரம்பூர் போயிட்டு இருந்தேன் . புரசைவாக்கம் அருகில் ஒரு பையன் 20 -25 வயசுக்குள்ள இருப்பான் நல்ல உயரம் . ரன்னிங்கில் முன்வாசலில் ஏற ஸ்லிப் ஆகி விழுந்துட்டான் டிரைவர் உடனே பஸ்ஸ நிறுத்திட்டார் , அத்தனைபேரும் தொலைஞ்சானுதான் நினைச்சோம் . ஏறினவன் முன் வீலுக்கும் பின் வீலுக்கும் நடுவுல கிடக்குறான் அப்புறம் அவனை அருகில் இருந்தவங்க தூக்க நல்ல வேலை அடி எதுவும் படல , டிரைவர் மட்டும் சைடு கண்ணாடி பார்க்காம இருந்திருந்தா அன்னைக்கு அவன் காலி . பயத்துல நல்ல  வேர்த்துடுச்சு அவனுக்கு , அன்னைக்கு அவன் கண்ணுல தெரிஞ்ச பயம் இனி ஜென்மத்துக்கும் ரன்னிங்கில் ஏற மாட்டான் .

நிகழ்வு 3 :
                  பாண்டிபஜாரில் அலுவலகம் முடிஞ்சு நானும் என் ப்ரெண்டும் பஸ் ஏற வெயிட் பண்ணிட்டு இருக்க அப்போதான் தேனாம்பேட்டை சிக்னல் முடிஞ்சு முதலில் இரண்டு சக்கர வாகனங்கள் வர ஒரு இரண்டு பசங்க ஹெல்மெட் போட்டு எங்களை கடந்து செல்ல நான் எங்களுக்கான பஸ் வருதான்னு முன்னமே அந்த ரோடு பக்கம் பார்த்துட்டு இருந்தேன் . இந்த பசங்களையும் ஏனோ கண் தன்னிச்சையாய் நோட் பண்ணிச்சு (சைட் அடிச்சதத்தான் இவ்வளவு மரியாதையா சொல்றேன் , ஹெல்மெட் போட்டாலும் பார்ப்போம்ல ) எங்கள் முன் வர வண்டி ஸ்கிட் ஆகி அப்படியே சறுக்கிகிட்டு போகுது படத்துல வர ஸ்டன்ட் ஸீன் பாக்குற மாதிரி இருக்கு . பெட்ரோல் கொட்டுது , ஹெல்மெட் எல்லாம் கழண்டு ஓடுது . எல்லாரும் அதிர்ச்சில நிக்குறோம் . நல்ல வேலை முதலில் வந்தவங்க எல்லாம் பைக் அதனால எல்லாம் ஸ்டாப் பண்ணி அவங்களை தூக்கி விட்டாங்க , பின்னாடி மட்டும் ஒரு கார்ப்பரேசன்  பஸ் வந்திருந்தது அவ்ளோதான் , நம்ம ஊரு பஸ் பிரேக் பிடிக்குற லட்சணம்தான் தெரியுமே இங்க பிடிச்சா பத்தடி தள்ளிபோய்தான்   பஸ் நிக்கும் . பாவம் அந்த பசங்க கொஞ்சம் அடி பட்டுடுச்சு பான்ட் கூட கொஞ்சம் கிழிஞ்சு போச்சு . அவங்க முழிச்ச முழி நல்ல வேலை தப்பிச்சுட்டோம்டா சாமின்னு சொல்ற மாதிரி இருந்தது . ஹெல்மெட் போடுறது மட்டுமில்ல போடுற ஹெல்மெட் கொஞ்சம் கழண்டு போகாத அளவுல போடுங்க .
Posted by மதார் at 12:40 AM
Labels: மரணபயம்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ▼  May (6)
      • என்னுடைய கோவம் நியாயமானதா ?
      • ஒரு பெண்ணின் திருமண எதிர்பார்ப்புகள்
      • மரண பயம் பார்த்ததுண்டா ?
      • ஏப்ரல் பயணம் ஒரு அனுபவம்
      • அல்வா வாங்கி வரும் நெல்லை மக்களே கவனம்
      • ஊர்பிரச்சனை உடனடி தீர்வு வேண்டும்
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio