சென்னை வந்த முதல் வருட ஊர் பயணம் எல்லாம் SETC தான். ஒருமுறை ஊருக்கு போய் சென்னை திரும்ப நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆர்யாஸில் (காலேஜ் படிக்கும்போதிருந்தே பிடித்த கடை , இங்கே சுடச்சுட தரும் பேல்பூரி ஒரு தட்டு வாங்கி 2 ஸ்பூன் போட்டு நானும் ப்ரெண்டும் சாப்பிட்ட நாட்கள் ..................) 2 .5 kg அல்வா , அரை கிலோ மிச்சர் (இது அண்ணா பொண்ணு விரும்பி சாப்பிடும் ஒன்று , அண்ணி ஸ்பெஷல் ஆ சொல்லிவிட்டாங்க .) எல்லாம் வாங்கி தனி ஆர்யாஸ் கவர் ல போட்டு ரொம்ப பத்திரமா என் சீட் கீழ வச்சுருந்தேன் .
திருநெல்வேலி -சென்னை பஸ் , ஏறி உக்காந்ததும் நம்ம மக்கள்தாநேனு நம்பி தூங்கிட்டேன் .தாம்பரம் தாண்டியதும் முழிச்சு என் லக்கேஜ் எல்லாம் தேடிப்பிடிச்சு எடுத்தா (1 bagthan ) என் ஆர்யாஸ் கவர் காணோம் . நான் இருந்தது 3 வது வரிசை சீட் . முதல் சீட் வரைக்கும் பார்த்துட்டேன் இல்ல . தாம்பரத்துல இறங்கின ஒரு நல்ல நம்ம ஊரு மனுஷன் எடுத்துட்டு போயிட்டாரு . கால் கீழ வச்சுருந்த கவர் கொஞ்ச கொஞ்சமா முன்னாடி நகர்ந்து போயிருந்துறுக்கு. சென்னை பொழுது ரொம்ப நல்லா எனக்கு அன்னைக்கு விடிஞ்சது . என் கூட வேலை பாக்குறவங்களுக்காக அல்வா வாங்கி வந்த எனக்கு அந்த நல்ல மனுஷன் அல்வா குடுத்துட்டு போய்ட்டாரு .
நான் பஸ்ல தொலைச்ச கதைய சொன்னா யாரும் நம்பாம நான் வாங்கி வராம பொய் சொல்றேன்னு வேற சொல்லி என்ன கடுப்பேத்திட்டாங்க . நான் விட்ட சாபத்துல அந்த அல்வா சாப்பிட்டவங்க எல்லார்க்கும் கண்டிப்பா ...............போயிர்க்கும். இதன்மூலம் சொல்ல வரும் மாறல் என்னவென்றால் ,
1 .மக்களே நம்ம மக்களையும் நம்பாதீங்க ........... ட்ரெயின் , பஸ் எதுவா இருந்தாலும் உங்க உடமை மேல் ஒரு கண்ணு இருக்கட்டும்.
2 .ஒரு இடத்துல மட்டும் பணம் வைக்காதீங்க , 2 அல்லது 3 இடங்களில் கொஞ்சம் பிரிச்சு வைங்க . ஒரு இடம் திருட்டு போனாலும் மற்ற இடங்கள் கை கொடுக்கும் .
3 . சக பயணியிடம் அளவாக பேசுங்கள் , நல்லா பேசுறார்னு உங்கள முழுசும் அப்படியே ஒப்பிக்காதீங்க .
4 . உங்க மொபைல் நம்பர் குடுப்பதை தவிர்த்திடுங்க ,
இதுஒரு மீள்பதிவு .


