skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Monday, June 14, 2010

போரம் பொறுமையை சோதிக்கும் தளம்

ப்லோக்கர்ஸ் போரம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை இதை உருவாக்கியோர் விளக்கினால் நன்றாக இருக்கும் .
இப்போதான் தமிழ்மணத்தில் பரிந்துரை , மகுடம் என்ற சிறப்பு பிரிவுகள் எடுக்கப்பட்டு எல்லோரும் சமம் என்ற நிலைக்கு வந்துள்ளது . பரிந்துரை , மகுடப் பதிவுகளாவது நாமாக அந்தப் பக்கத்திற்கு சென்றால் மட்டுமே அந்தக் கொடுமைகளை அனுபவிக்க முடியும் . போரமில் வரும் பதிவுகள் நாம் உறுப்பினராய் இருக்கும் பாவத்திற்கு நம் விருப்பமின்றி நம் மெயில் இன்பாக்ஸ் ஐ நிரப்புகின்றன .விருப்பமில்லா ஒன்றை மற்றவர்களுக்கு வலுக்கட்டாயமாய் திணிப்பதும் பாவத்திற்கு சமானமே .பரிந்துரை , மகுடத்தில் எப்படி சிலபேர் மட்டுமே தொடர்ந்து ஆட்சி பீடத்தில் தன் அரசவையினருடன் ஆட்சி புரிந்தனரோ அதேக் கதைதான் இப்பொழுது போரமிலும் நடக்கிறது .ஆண் , பெண் என பல வயதினரும் இருக்கும் ஒரு இடத்தில் சர்ச்சையான சிலவற்றை சாதாரணமாய் எழுதிவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் மன்னிப்பு கேட்டு என தேவையில்லாத மோதல்கள் ஏன்? வேலைவாய்ப்பு , அவசர தேவை , உதவி , ஆலோசனைகள் அல்லது எளிதில் தெரியப்பெறாத சில விஷயங்கள் இவற்றைப் பகிர பதிவர்கள் இந்தப் பக்கத்தை பயன்படுத்தினால் நல்லது . "நாங்கள் இப்படித்தான் செய்வோம் உனக்கு பிடிக்கவில்லைஎன்றால் குழுமத்திலிருந்து விலகிக்கொள் " இப்படி என்னும் பலரின் மனக்குரல் கேட்கிறது . பிடிக்காத இடங்களில் எல்லாம் விலகிப் போக ஒரு நிமிடம் போதும் , அப்படி விலகி போய்க்கொண்டே இருந்தால் எந்த ஒரு இடத்திலும் ஓர் அங்கமாய் நிலைத்திருக்க முடியாது .தரக்குறைவான பொருளும் , தரமுடைய பொருளும் ஒரே இடத்தில்தான் இருக்கும் விலையில் மட்டுமே மாற்றம் இருக்கும் . தரக்குறைவான பொருள் இருக்கும் என்பதற்காக அவ்விடத்தையே வெறுக்கமுடியாது . "போரமில் வரும் பதிவுகள் படிக்க விருப்பம் இல்லையென்றால் Unsubscribe from this mailing-list   குடுக்கலாமே  அல்லது டெலீட் பண்ணலாமே அதை விட்டுட்டு ஏன் இந்தப் புலம்பல் ? என் விருப்பமின்றி எனக்கு வரும் மெய்ல்களை Unsubscribe, Delete  பண்ணுவதும் எரிச்சலடையும் விசயங்களே .பலருக்கும் இந்த எரிச்சல் இருக்கலாம் .ஆனால் யாரும் இதை எதிர்த்து சொல்ற மாதிரி தெரியல .ஒருவேளை ஏதாவதொரு நட்பு வட்டத்தில் மாட்டிக்கொண்டு இருக்கலாம் .என்னைவிடவும் வயதிலும் , அனுபவத்திலும் உயர்ந்தோர் பலர் இருக்கும் இடத்தில் திரும்ப திரும்ப இந்த மாதிரியான சில விசயங்களை பற்றி பேச எனக்கே சங்கடமாகத்தான் இருக்கு .என்ன செய்ய வேற யாரும் சொல்ல மாட்டேன்கிறீங்களே ? எனக்கும் பொறுமை ரொம்ப கம்மி .பதிவு எழுதியாச்சா அதை ஏங்க போரமில் போடுறீங்க ? மெயில் ஓபன் பண்ணாலே என் கவிதையை பாருங்க , கட்டுரையைப் பாருங்க என்று இருக்கும்போது கோவம் வேண்டாம் "பல் போன மாட்டை கொம்பு சீவி , சிங்காரிச்சு சந்தையில் நிப்பாட்டுவது மாதிரி இருக்கு " . கவிதை , கதை , கட்டுரைகள் ஒன்றும் காணக் கிடைக்காதவை அல்ல . பதிவுலகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது .எழுதுற நமக்கு தெரியும் இது போரமில் போடும் அளவிற்கு தேவையானதா என்று .உண்மையிலேயே இந்த விஷயம் பல பேரை சென்றடையனும் , பலருக்கு உடனடியாக தெரிய வேண்டும் அல்லது சிக்கலான விசயங்களுக்கு ஆலோசனைகள் , குழுமம் , கூட்டம் தொடர்பான விசயங்களுக்கு ஒரு தளமாக போரம் பயன்படுத்தப்படலாம் . எரிச்சலுடன் காலையிலேயே பல மெயில்களை delete,Unsubscribe  பண்ணும் வேலையைக் கூட மூன்றாம் நபர்களுக்கு அவர்களின் விருப்பமின்றி குடுக்க வேண்டாம் .
Posted by மதார் at 11:46 AM
Labels: குழுமம், பதிவுலகம், போரம்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ▼  June (5)
      • அம்பானி , அண்ணாச்சியை என்ன செய்யலாம் ?
      • கோவில் சண்டை - வாங்க வேடிக்கை பார்க்க
      • போரம் பொறுமையை சோதிக்கும் தளம்
      • வாழைப்பூ மொட்டு குழம்பு -மீன்குழம்பு வடிவில்
      • நீங்க பதிவரா ?எந்த கட்சி?
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio