skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Monday, May 2, 2011

அழிவை நோக்கி விவசாயம் -ஸ்ரீவைகுண்டம் அணை

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஒவ்வொருமுறை ஊர் போகும்போதும் அணையில் எவ்வளவு நீர் இருக்கிறது அணை எப்படி இருக்கிறது இதை பார்ப்பதே ஒரு வேலையாய் இருக்கும் . அண்மைக் காலங்களில் அணையின் நிலைமையைப் பார்த்தால் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் அணை என்ற ஒன்றே  இல்லாமல் போய்விடுமோ என்று இருக்கிறது . வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணி இந்த நதி கடலில் கலக்கும் வரையிலும் அதன் நீர் படும் இடங்கள் எல்லாம் செழித்து இருக்கும் . தாமிரபரணியின் கடைசி நீர்த் தடுப்பு ஸ்ரீவைகுண்டம் அணை .இதன் பின்னர் இந்த நதியின் நீரைத் தேக்கி வைக்கும் எந்த திட்டமும் எங்கும் செயல்படுத்தப் படவில்லை என்பது மழைக் காலங்களில் கடலில் கலக்கும் நீர் சொல்லும் . அணையின் வடகால் ,தென்கால் என்று இரண்டு பெரிய கால்வாய்களின் மூலம் பல ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் கொண்ட விளை நிலங்களில் பாசனம் செய்யப் படுகிறது .அதுமட்டும் இன்றி மக்களின் குடி நீருக்கும் இதுவே ஆதாரம் .தாமிரபரணி என்ற ஒன்று இல்லாமல் மட்டும் இருந்திருந்தால் அந்நிலப் பரப்பு முழுமையும் வெறும் உப்பு நீர் மட்டுமே கிடைக்கக் கூடும் .


தென் மதகின் முக்கிய நீர்ப் பிடிப்பு கடம்பா ஏரி, இந்த ஏரியின் கீழ் நேரிடைப் பாசனம்  பெறும் விளைநிலங்கள் ஏராளம் . அதுமட்டுமின்றி இதில் இருந்து செல்லும் கால்வாய் மூலம் திருசெந்தூர் வரையிலான சிறு குளங்கள் நிரம்பி அதன் மூலம் விவசாயம் நடக்கும் .இங்கு பயிரிடப் படும் முக்கியப் பயிர்கள் நெல் ,வாழை,உளுந்து . சில பகுதிகளில் மட்டும் மஞ்சள் ,தென்னை ,வெற்றிலைக் கொடி, நிலக்கடலை போனறவையும் குறிப்பிட்ட அளவில் விளையும் . வடமதகின் மூலம் ஆத்தூர் வரையிலான பாசனப் பகுதிகளில் விவசாயம் நடைபெறுகின்றது .ஆறுமுகநேரி குளத்தில் போய்ச் சேரும் வட மதகு அங்கிருக்கும் மினரல கம்பனிக்கும் நீர் ஆதாரம் .(உறிஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க ). இப்படி பல ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் தாமிரபரணி நதியையும் சில அடி உயரங்களைக் கொண்டு தடுப்புச் சுவருடன் விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அணையும்தான்.


   
திமுக ,அதிமுக ,காங்கிரஸ் எது இந்தத் தொகுதியை ஆண்டால் என்ன ஆண்டாண்டு காலமாய் இந்த அணையின் நிரந்தர ஆட்சியாளர்கள் நாங்கள்தாம் என்று போட்டி போட்டுக் கொண்டு குளித் தாமரையும் ,அமலைச் செடியும் ஆட்சி புரிகின்றன .நீங்கள் மட்டும்தான் ஆளுவீர்களா நாங்கள் மட்டும் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்போம் என்று கரையோரத்தில் இருந்த மரங்கள் தற்பொழுது ஆற்றின் நடுவில் இருக்கின்றன . மெதுமெதுவாய் படிந்த மணல் திட்டாகி திட்டு மேடாகி இன்று ஆற்றின் நடுவில் ஒரு தீவு போல் இருக்கிறது .எல்லாவற்றையும் தாண்டி வேலி காத்தான் என்றழைக்கப்படும் செடியும் உள்ளே இருக்கிறது .இந்தச் செடியின் குணம் வேர்கள் அசுர வேகத்தில் வளரக் கூடியவை குறுகிய காலத்திலேயே பரந்த நிலப் பரப்பை தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும் .அவ்வளவு எளிதில் அழிக்க முடியாதது நெருக்கமாகவும் வளரக்  கூடியது .மூங்கில் கம்பு போன்ற தோற்றம் கொண்டு இச்செடிகள் நடுவில் வேறெந்த செடியும் வளர இடம் இல்லாத அளவில் இதன் வேர்கள் மண்ணை பிடித்துக் கொள்ளும் .ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதும் இந்த அணையை நாங்கள் அகலப் படுத்துவோம் ,ஆழபடுத்துவோம் என்றனர் அண்மையில் இதில் படகுக் குலாம் அமைத்து சுற்றுலாத் தளமாக மாற்றுவோம் என்றனர் .இதுபோன்ற வெறும் வாய்ச்சவடால்களுக்கு அங்கொன்றும் குறைவில்லை .இந்த மாதிரியான காற்றில் பறக்கும் திட்டங்களைச் சொல்லி வெற்றி பெற்றவுடன் எந்தக் கட்சியின் சார்பிலும் இதுவரையிலும் அந்த அணையின் சார்பாய் ஒரு ..................கூட பிடுங்கவில்லை என்பது அந்த வைகுண்டநாதரும் மக்களும் மட்டுமே அறிந்த உண்மை .

எந்த MLA ,MP க்கு எத்தனை வீடுகள் உள்ளன ,எந்த நேரத்தில் எங்கு இருப்பார் என்று அதி பயங்கரமாய் புலனாய்வு செய்து முதல் பக்கத்திலும் முக அட்டையிலும் போட்டு பரபரப்பு கூட்டும் பத்திரிகைகள் அழிந்து கொண்டிருக்கும் இந்த அணையையும் அந்தப் பகுதி மக்களின் விவசாயத்தையும் காக்கவும் கொஞ்சம் கண் திறக்கலாமே .கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் தொடர்ந்து ஒரு விசயத்தைப் பற்றிய செய்திகள் வரும் பட்சத்தில் அரசின் கண்களுக்கு இந்த விசயமும் தெரிய வருமே . அணையின் படகுக் குலாமும் வேண்டாம் சுற்றுலாவும் வேண்டாம் தண்ணீர் மட்டும் போதும் .இதற்கு ஒரே வழி அணையை சீர் படுத்துவது களைச் செடிகளை களைந்து ஆழப் படுத்தினாலே போதும் .ஒரு முறை செய்தாலே பல வருடங்கள் தாங்கும் எந்த அரசாவது இதைச் செய்யாதா என்பதே அங்கிருக்கும் ஒவ்வொரு விவசாயின் விருப்பமும் கூட .இதை முழுக்க முழுக்க அரசின் பார்வைக்கு கொண்டு செல்லும் ஒரே வழி பத்திரிக்கை துறை மட்டுமே .மேற் சொன்ன விஷயங்கள் மட்டும் நடந்தால் அங்கிருக்கும் மக்கள் எந்தப் புண்ணியவான் பண்ணிய நல்ல காரியமோ என்று உங்களை மனதார வாழ்த்துவர் .பிரதிபலன் பார்க்காமல் ஒரு பத்திரிகையாவது இதைச் செய்யாதா என்று எதிர் பார்த்திருக்கும் பலாயிரக்கனக்கான விவசாயிகளுள் ஒரு விவசாயியின் ஒரு சிறு அடி இது .அணையின் சார்பாக போராட்டங்கள் அதன் மூலம் அரசின் பார்வை என்பதெல்லாம் அங்கே நடக்காத விஷயம் .
Posted by மதார் at 4:01 PM
Labels: அனுபவம், தூத்துக்குடி, விவசாயம், ஸ்ரீவைகுண்டம் அணை
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ▼  2011 (9)
    • ►  November (1)
    • ▼  May (2)
      • என் பள்ளி - சின்ன பயணம்
      • அழிவை நோக்கி விவசாயம் -ஸ்ரீவைகுண்டம் அணை
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio