skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Thursday, April 14, 2011

இப்படியும் சில மனிதர்கள்


"கொடுமை கொடுமை என கோவிலுக்கு போனால் அங்கே ஒரு கொடுமை நின்னு தையா தக்கா என ஆடிச்சாம் " என் அக்கா அடிக்கடி சொல்லும் பழமொழி இது . இன்று எனக்கு நல்லாவே பொருந்திப் போனது .வெகு நாட்களாய் போக நினைத்திருந்த கோயில் அது என் இஷ்ட தெய்வமும் கூட .சென்னையின் பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயில் அது .புதுவருடமும் அதுவுமாய் பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு வரலாமே என்று அர்ச்சனைதேங்காயும் வாங்கிக் கொண்டு போனேன் . அர்ச்சனை சீட்டும் வாங்கி கடவுள் பெயருக்கு அர்ச்சனையும் செய்தாச்சு . தீபாராதனை முடிந்து அர்ச்சனைப் பையுடன் வெளிவந்த குருக்கள் மற்றவர்களுக்கு கவர் குடுத்தும் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை .ஒருவேளை மறந்து போயிருப்பாரோ என்றெண்ணி நானாய்   கேட்டும் தரேன்  என்று கண்களில்  மட்டும்  பதில்  வந்தது  .ஆபீஸ்  போகும்  அவசரம்  வேறு  பொறுமையாய்  காத்திருக்க  என் கவர் மட்டும் உள்ளே  போயிற்று. அடுத்த வரிசை அர்ச்சனைகளும் தொடர அப்போதுதான் என் கவர் உள்ளே போன விஷயம் புரிந்தது .

எல்லோருமே அவர் தட்டில் பணம் போட நான் மட்டும் வெறும் தீபாராதனை மட்டும் எடுக்க கவர் கொடுக்கப் படவில்லை .அடுத்த வரிசை கவர்களும் காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு கொடுக்கப் பட காத்திருந்தேன் .அப்போதாவது நான் போடுவேனா என்று பார்த்தவர் கருவறை போய் கவர் எடுத்தவர் மீண்டும் உள்ளே சென்று ஒரு முறி தேங்காயை அவருக்கான தனி இடத்தில் வைத்துவிட்டு வெறுப்புடன் கவர் தந்தார் . புதுவருடமும் அதுவுமாய் காலங்கார்த்தாலே பத்துபேர் முன்னிலையில் அர்ச்சகரை அர்ச்சனை செய்ய விரும்பவில்லை .வாய் வரை வந்த வார்த்தைகளை வெகுவாய் அடக்கிவிட்டு வெளிவந்தேன் .என் கவர் என் கை வருகையில் அவர் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட திருப்தி ,என்னை  பழிவாங்கிவிட்டாராம் .அற்பப் பதறு போல் அந்த நொடியில் அவர் என் மனதில் தோன்றியது அவர் மனம் அறியாது .நினைவு தெரிந்த நாளில் மிக அமைதியாய் என்னைக் கட்டுபடுத்திக் கொண்டு வந்தது இதுவாகத்தான் இருக்கும் .

அந்த இடத்தில் அவரின் நடவடிக்கை வாசலுக்கு வெளியே ஏந்தியிருக்கும் தட்டுக்கும் கர்பகிரகத்தில் அவர் ஏந்தியிருக்கும் தட்டுக்கும் பெரிதாய் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை . தட்டுகள் இருக்கும் இடம் வேண்டுமானால் மாறி இருக்கலாம் அடிப்படையில் நோக்கம் என்னவோ ஒன்றுதான் . அவர் அர்ச்சனை செய்ய அரசாங்கம் சம்பளம் தருகிறது .நானும் அர்ச்சனை முறையாய் அர்ச்சனை சீட்டு வாங்கித்தான் செய்கிறேன் . சின்னவயதிலிருந்தே எனக்குள் இருக்கும் ஒரு குணம் கோயில்கள் போனால் நான் காணிக்கை இடுவது ஒரு ரூபாயாக இருந்தாலும் அது கோயில் உண்டியலாகத்தான் இருக்கும் .எந்த குருக்களின் தட்டிலும் நான் காணிக்கை  இட்டதும் இல்லை .எவர் ஒருவர் அவர்கள் தட்டில் காணிக்கை இடுகின்றனரோ அவர்களுக்கு பிரசாதம் காகிதத்தில் மடித்துக் கொடுக்கப்படும் கூடவே விசேசித்த பூவும் ஒரு துண்டு வரும் .தீபாராதனை மட்டும் எடுப்பவர்களுக்கு பிரசாதம் கொடுக்கவோ அவர்களாகவே எடுத்துக் கொள்ளவோக் கூட அங்கே நேரம் இருக்காது .அந்த அளவுக்கு சில அர்ச்சகர்களின் மனம் பெரியது .பிரசாதம் கொடுக்கும்போதும் எங்கே நம் கை அவர்களை தொட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பிரசாதம் குடுக்கும் அவர்கள் கை இருக்கும் உயரம் பார்த்து பல முறை சிரித்திருக்கிறேன் .அந்த உயரத்தில் அவர்கள் தொட்டும் தொடாமலும் போடும் பிரசாதம் பல நேரங்களில் காற்றிலே போய்விடும் .

பணம் இருக்கிறது என்று இருப்பவனுக்கு செய்வதைவிடவும் ஒருவனுக்கு ஒருவேளை பசியாற கோயில் வாசலில் காத்திருப்பவனுக்கு கொடுக்கலாம் .மற்றவர்கள் முன்னிலையில் பகட்டாய் பர்ஸ் பிரித்து அலட்சியமாய் எடுத்துப் போடும் நோட்டும் அதற்கு கிடைக்கும் சிறப்பு கவனிப்பும் அவர்கள் எந்த நோக்கத்துக்காக கோயில் வந்தனரோ அது அடியோடு அழிந்து போகும் . இபப்டி கொடுத்து கொடுத்தே எல்லோரிடமும் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர்களை வளர்த்து விட்டது நாம்தான் .இதுவும் ஒருவகை லஞ்சமே .இன்றைய பொழுது முழுவதும் அந்த அர்ச்சகரின் செயலுக்கு ஒரு சிறு எதிர்ப்பு கூட காட்டாமல் வந்துவிட்டோமே என்று நினைத்து மனம் கொதித்துக் கொண்டிருக்கிறேன் . இன்னொருமுறையும் அதே கோயில் செல்ல வேண்டும் அர்ச்சனையும் செய்திட வேண்டும் .அந்த அர்ச்சகரே இருக்க வேண்டும் நான் தட்டில் காணிக்கை இடப் போவதுமில்லை அவர் எனக்கு அர்ச்சனைத் தேங்காய் தரப் போவதுமில்லை அந்த நொடியில் சொல்ல வேண்டும் இந்த முறை எனக்கு நீங்கள் அரை முறி தேங்காய் கூட தர வேண்டாம் .முழுத் தேங்காயும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என் பெயரைச் சொல்லி சாப்பிடுங்கள் என்று அவர் முகத்துக்கு நேராய் சொல்லிவிட்டு வர வேண்டும் .இனி எவரிடமும் அவர் காணிக்கை எதிர்பார்த்து இறைவனுக்கு சேவகமும் செய்திடக் கூடாது .இந்த பதிவு குறிப்பிட்ட எந்த ஒரு சமுதாயத்தையும் அதைச் சார்ந்த மக்களையும்  காயப் படுத்த அல்ல .பல வருடங்களாய் பார்த்து நொந்து போன நினைவுகளின் வெளிப்பாடுதான் .கறி மீன் சாப்பிட்டுக் கொண்டு ஐயனாருக்கும் சுடலை மாடனுக்கும் சூடம் காட்டும் சராசரி  மனிதன் வேதங்கள் பல கற்று சாஸ்திரங்களில் மூழ்கிய பல அந்தனரகளைவிடவும் மேலானவன் . இந்த வரிகளுக்காக என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களை வரவேற்கிறேன் .
Posted by மதார் at 10:10 PM
Labels: அனுபவம், குருக்கள், கோயில், சென்னை, பகல்கொள்ளை, லஞ்சம்
Newer Post » « Older Post Home
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ►  2012 (7)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ▼  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ▼  April (1)
      • இப்படியும் சில மனிதர்கள்
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • காட்சிகள் ஒன்று காலங்கள் வேறு
    காட்சி 1 எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது . "எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துள...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio