16 .7 .2004 அன்று மறைந்த மலர்களுக்காய் ஓர் அஞ்சலி ...........
பூ போன்ற விரல்களை
மெல்ல வருடினாள்
மலர் போன்ற உடலை
மெல்ல அணைத்தாள்
மலர்ச்சூடும் கூந்தலையும்
சேர்த்து அணைத்தாள்
அணைப்பிலேயே உயிரையும்
அடக்கி விட்டாள்
கருகிப் போன மொட்டுகளுக்கோர்
மலர்மாலை சமர்ப்பணம் .
